தஞ்சாவூர், பிப்.17- மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடி மக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கு பதிவேடு போன்ற மக்கள் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி இடதுசாரி கூட்டியக்கம் சார்பில், திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை பட்டுக்கோட்டையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, சிபிஐ ஒன்றி யச் செயலாளர் ஏ.எம்.மார்க்ஸ் தலைமை வகித்தனர். சிபிஐ நகரச் செயலாளர் எம்.எம்.சுதாகர் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சி. ஜெயபால், எஸ்.தமிழ்ச்செல்வி ஆகியோர் கண்டன உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம். செல்வம் ஏ.கோவிந்தசாமி, கே.கிருஷ்ண மூர்த்தி, நைனாமுகமது, எஸ்.பாலகிருஷ் ணன், பாண்டியன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகக்குழு இரா.திருஞா னம், ஏ.கலியபெருமாள், எல்.வீரபாண்டி யன், ரோஜா ராஜசேகரன் உள்ளிட்ட நூற் றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர். திருவோணம் ஒன்றியம் ஊரணிபுரம் கிளை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிபிஐ ஒன்றியச் செயலா ளர் கே.ராமசாமி, சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் பி.கோவிந்தராஜூ தலைமை வகித்தனர். சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் ப. காசிநாதன், மு.பால்ராசு, ரெ.கோவிந்தராசு, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் கே. ராமசாமி மற்றும் இடதுசாரி அணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கும்பகோணம்
இடதுசாரிகள் சார்பில் பாபநாசம் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தி ற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் ஒன்றிய செயலாளர் காதர் உசேன், சிபிஐ ஒன்றிய செயலாளர் செல்ல துரை தலைமை வகித்தனர், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன், சிபிஐ மாநில நிர்வாக குழு உறுப்பினர் தில்லைவனம், சிபிஎம் மாவட்ட குழு விஜ யாள் புண்ணியமூர்த்தி சிபிஐ மாவட்டக் குழு குணசேகரன் தர்மராஜ் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.