tamilnadu

img

ஜன.8 வேலை நிறுத்த விளக்க கூட்டம்

கும்பகோணம், ஜன.4- மத்திய- மாநில அரசுகளின் தொழி லாளர், மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து வரும் எட்டாம் தேதி நடை பெற இருக்கின்ற பொது வேலை நிறுத்த  போராட்டத்திற்கு ஆதரவு தெரி வித்தும், அதன் விளக்க வாயிற்கூட்டம், கும்பகோணம் ஏஆர்ஆர் சிவல் மற்றும் மைதீன் புகையிலை தொழிலாளர்கள் சார்பில் நடைபெற்றது.  வேலை நிறுத்த போராட்டத்தை விளக்கி சிஐடியு தஞ்சை மாவட்ட செய லாளர் ஜெயபால், துணை செயலாளர் கமலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கும்பகோணம் நகர செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் உரை ஆற்றினர். ஏஆர்ஆர் தொழிலாளர் மைதீன், புகையிலை தொழிலாளர்கள் செந்தில், சண்முகம், இளங்கோவன், தாஜூதீன், கணேசன் உள்ளிட்ட ஏராள மான சிஐடியு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

;