tamilnadu

img

பாதிக்கப்படுவது முஸ்லிம்கள் மட்டுமல்ல, இந்துக்களும்தான் குடியுரிமை திருத்தச் சட்ட கண்டனப் பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் பேச்சு

தஞ்சாவூர், பிப்.15- மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடி மக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை திரும்பப் பெறக் கோரி கண்டனப் பொதுக்கூட்டம் அதிராம் பட்டினம் கடற்கரைத்தெரு விளை யாட்டு மைதானத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற்றது.  கூட்டத்தில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி தனது கண்டன உரையில், இந்த 11 பேர் மட்டும் இந்த சட்டத்திற்கு ஆதர வாக வாக்களிக்காமல் இருந்திருந் தால் இந்த சட்டத் திருத்தமே வந்திருக் காது. முதன் முதலாக குடியுரிமை சட்டம் வருகிற போது அதற்கான விவாதத்தை நாடு முழுவதும் இருக்கக் கூடிய மாநில சட்டமன்றங்களில் விவா தத்திற்கு கொண்டு வரப்பட்டது. தற்போது மாநில சட்டமன்றங்களில், பொதுவெளியில் இதற்கான விவா தங்கள் இல்லையென்றால் இது ஜன நாயக நாடா? தில்லியில் இருக்கிற இந்தியா கேட்டில், இந்தியாவின் சுதந் திரத்திற்காக தங்களை அழித்துக் கொண்ட தியாகிகள் 95 ஆயிரம் பேரின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன அதில், 61 ஆயிரம் பேர் முஸ்லீம்கள். தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) சட்டம் வந்த பிறகு 19 லட்சம் பேர் குடியுரிமையை இழந்து அசாம் மாநிலத்தில் உள்ளனர். இதில், 6 லட்சம் பேர் மட்டும் தான் முஸ்லீம்கள், எஞ்சிய 13 லட்சம் பேர் இந்துக்கள். எனவே, இந்த சட்டத்தால் பாதிக்கப் படுவது முஸ்லீம்கள் மட்டுமல்ல, இந்துக்களும் தான்’ என்றார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா தனது கண்டன உரை யில்; தமிழ்நாட்டில் இந்துக்களையும், முஸ்லீம்களுக்கும் பிரித்து பார்க்கின்ற பேதம் இந்த மண்ணிற்கு கிடையாது. ஒரு சமூகத்தோடு மற்றொரு சமூகத்த வர் மாமன், மச்சான் என்று உறவு கொண்டாடுவது, சித்தப்பு என்று சொல் வது, மாமு என்று அழைத்துக்கொள் வது இந்த நாட்டினரின் இயல்பான பழக்கம். மனிதனை உருவாக்குவ தில் மதத்திற்கான பங்கு மிகப்பெரிய ளவில் உள்ளது. எப்படி பெற்றோர் ஒரு பங்கு, கல்வி ஒரு பங்கோ. அதுபோல் மதம் ஒரு பங்கு. என்னுடைய மதம் சிறந்தது. உன்னுடைய மதம் மோசமா னது என்கின்ற போக்கு ஏற்பட்ட பிறகு தான் மோதல் ஏற்பட்டது’ என்றார். தமுமுக மாநில துணைத்தலைவர் கோவை செய்யது தனது கண்டன உரையில்; இந்திய சேதத்தினுடைய முஸ்லீம்களை சன்னம், சன்னமாக அப்புறப்படுத்துவதற்கான சதிக்கூட் டத்தின் ஒரு பகுதி தான் இந்த குடி யுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ). அதன் அடுத்த பகுதி தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) அடுத்தது. தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி). அவர்கள் அமல்படுத்த துடிப்பது அது தான். இந்திய தேசத்தின் விடுதலைக்கு வித்திட்டவர்கள் முஸ்லீம்கள். என்றார். வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா தனது கண்டன உரையில்; குடியுரிமை சட்டம் 1955 ல் இயற்றப்பட்டது. இந்த சட்டம் ஆறு முறை திருத்தப்பட்டது. 5 முறை கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தை எதிர்த்து போராடாதவர்கள் இப்போது தெருவில் வந்துநின்று போராடுவதன் நோக்கம் இஸ்லாமிய மதத்தை சார்ந்தவன். இந்த சட்டத் தின் மூலம் இந்தியாவுக்குள் வரக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளதால் தான். இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது. இந்த நாடு மதச்சார் பற்ற நாடு என்று. இந்த நாட்டில் இஸ் லாமியர்கள் வரக்கூடாது என்று இப்படி ஒரு குடியுரிமை திருத்த சட் டத்தை இந்தியாவில் இயற்றினால் அது செல்லுமா? செல்லாதா? என்றார்.  முன்னதாக, கடற்கரைத்தெரு ஜூம்மா பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி. எம்.ஜி சபியுல்லா அன்வாரி தொடக்க உரை நிகழ்த்தினார். கூட்டத்திற்கு, கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி நிர்வாகக் கமிட்டித் தலைவர் ஏ.அப்துல் ரெஜாக் தலைமை வகித்தார். அதிராம்பட்டினம் அனைத்து சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியினை, ஏ.முகமது ஹஸ னார் தொகுத்தளித்தார். நிறைவில், அண்ணா சிங்காரவேலு நன்றி கூறி னார். கூட்ட ஏற்பாட்டினை கடற்கரைத் தெரு மஹல்லாவாசிகள் செய்தி ருந்தனர். கூட்டத்தில், சி.எப்.ஐ விதைகள் கலைக்குழுவினர், ஊர் பிரமுகர்கள், கிராம பஞ்சாயத்தார்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 10 ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் பங்கேற்று, மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரி வித்தும், அவற்றை திரும்ப பெற வலி யுறுத்தியும் தங்களது செல்லிடப்பேசி யில் விளக்கு எரியவிட்டபடி முழக்க மிட்டனர்.