tamilnadu

img

வெளிநாட்டில் இறந்தவரின் குடும்பத்திற்கு சட்டப்படியான நிலுவைத் தொகை வழங்கல்

 தஞ்சாவூர் நவ.4- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ஆ.அண்ணா துரை  தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.  கூட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தை சேர்ந்த நாஜிருதீன் பக்கீர் கனி என்பவர் சவுதி அரேபியாவில் பணியில் உள்ள போது இறந்தமைக்கு சட்டப்படியான நிலு வைத் தொகை ரூ.6,71,913 க்கான காசோலையை அவரது மனைவி மஹபுனிஷா என்பவருக்கும், சமூக நலத்துறை சார்பாக சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 5 பயனாளிக ளுக்கு தையல் இயந்திரமும், வருவாய் மற்றம் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பாக திருவிடைமருதூர் வட்டம் அன்பழகன் என்பவர் இடி தாக்கி சிகிச்சை பலனின்றி இறந்தமைக்கு அவரது மனைவி பானுமதிக்கு ரூ.4,00,000 க்கான காசோலையையும், மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பாக பாபநாசம் வட்டத்தை சேர்ந்த மதியழகன் எனபவ ருக்கு சிறப்பு சக்கர நாற்காலியையும் ஆட்சியர் வழங்கி னார். கூட்டத்தில் முதுநிலை மண்டல மேலாளர் கதிரேசன், மாவட்ட சமூக நல அலுவலர் ராஜேஷ்வரி மற்றும் அனைத்துத்துறை  அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

;