தஞ்சாவூர், ஜூன் 30- தஞ்சையில் இதய நோயால் பாதிக்கப் பட்டு, ஆபத்தான நிலையில் இருந்த காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் கொ ரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலை யில் திங்கள்கிழமை உயிரிழந்தார். தஞ்சாவூர் கீழவாசலை சேர்ந்த 56 வயது நபர், தஞ்சாவூர் தெற்கு காவல் நிலை யத்தில், சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி யாற்றி வந்தார். இதய நோயால் பாதிக்கப் பட்ட நிலையில், அறுவை சிகிச்சை செய்வ தற்காக ஜூன் 10 அன்று மருத்துவ விடுப்பு பெற்று சென்னைக்கு சென்றார். அங்குள்ள தனியார் மருத்துவமனையில், ஜூன் 15 அன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகும் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த இவர், சென்னையிலிருந்து ஜூன் 27 அன்று தஞ்சாவூருக்கு திரும்பினார். பின்னர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஜூன் 28 அன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டார். அங்கு இவர் திங்கள்கிழமை மாலை உயி ரிழந்தார். இதனிடையே, சென்னையில் இருந்து திரும்பிய நிலையில், இவருக்கு கொ ரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலை யில், தொற்று இருப்பது அன்று இரவு தெரிய வந்தது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகை யில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பாதிப்பில் இருந்து மீளாத அவர், செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்ட நிலையில்தான், தஞ்சாவூர் மருத்து வக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்ப ட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும், இதய நோய் கார ணமாகவே அவர் இறந்தார்” என்றனர்.