tamilnadu

img

விலைவாசி உயர்வை கண்டித்து நூதனப் போராட்டம்.....

தஞ்சாவூர்:
விலைவாசி உயர்வை கண்டித்து வெங்காய மாலை அணிந்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தஞ்சை ரயிலடியில் பண்டிகை பஜார்நூதனப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ்.தமிழ்ச் செல்வி கண்டன உரையாற்றினார். பொருளாளர் ஜி.வசந்தி, துணைச் செயலாளர் டி.வசந்தி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், வெங்காயம் விலை உயர்வு, மளிகைப் பொருட்கள் விலை அதிகரிப்பு, எரிவாயு மானியம் ரத்து, தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாட முடியாத நிலையில் உள்ளதை விளக்கி, வெங்காய மாலை அணிந்தும், எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்தும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.