கிருஷ்ணகிரி, ஜூலை 13- கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 640 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வினாடிக்கு 480 கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வலது மற்றும் இடது கால்வாய்க ளில் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டது. இந்நிலையில், கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவ தால், அணைக்கு நீர்வரத்து 640 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியில், 40.34 அடிக்கு நீர் இருப்பு அதிகரித்துள்ளதால் வரும் நீர் அப்படியே அணையிலிருந்து திறந்து விடப்படுகிறது. காலங்காலமாக கெலவரப்பள்ளி அணைக்கு பெங்களூரு கழிவு நீரே வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மழைக் காலங்களில் பெங்களூரு குடியிருப்புகள் மற்றும் தொழிற் சாலைக் கழிவுகள் அதிகளவில் தென்பென்னை ஆறு மூலம் அணைக்கு வருவதால் தற்போது வெளியேறும் தண்ணீர் வெள்ளை நுரை நுரையுடனும், ரசாயனக் கழிவுகளுடனும் வந்து கொண்டிருக்கிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.