tamilnadu

img

ஓய்வூதியர்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளித்திடுக!

தஞ்சாவூர், ஆக. 14- தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம், தஞ்சாவூர் மாவட்ட மூன்றாவது மாநாடு தஞ்சையில் நடைபெற்றது. தஞ்சாவூர் ஆழி.இராம.அரங்கராசன் நினைவரங்கத்தில், (நான்சி மகாலில்) செவ்வாய்க்கிழமை மூத்த தோழர் எச். சையது முகைதீன் பாட்சா சங்கக்  கொடியினை ஏற்றினார். மாநாட்டி ற்கு மாவட்டத் தலைவர் இர.கலிய மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.சுத்தா னந்தம் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். தஞ்சை வட்டத் தலைவர் எஸ்.பால சுப்பிரமணியன் வரவேற்றார். சங்க த்தின் மாநிலத் துணைத் தலை வர் ஆர்.ஜோதி துவக்கவுரை யாற்றினார். மாவட்டத் தலைவர் இரா.  இராஜகோபாலன் வேலையறிக்கை யையும், ஜி.பூபதி வரவு-செலவு அறி க்கையையும் சமர்ப்பித்தனர்.
புதிய நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக இர.கலிய மூர்த்தி, மாவட்டச் செயலாளராக இரா. இராஜகோபால், மாவட்டப் பொருளா ளராக ஜி.பூபதி ஆகியோர் தேர்ந்தெ டுக்கப்பட்டனர். மேலும், இரா.தமி ழ்மணி, தமிழ்செல்வன், சமுதாயக்கனி துணைத் தலைவர்களா கவும், ஏ.வெங்கடேசன், அன்புமணி,  என்.தட்சிணாமூர்த்தி இணைச் செய லாளர்களாகவும், டி.சுத்தானந்தம், கோ விந்தராஜ் மாநில செயற்குழு உறுப்பி னர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட னர். புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டமே அனைவருக்கும் அமல்ப டுத்தப்பட வேண்டும், 21 மாத நிலு வைத் தொகையை வழங்கிட வேண்டும், தொகுத்துப் பெற்ற ஓய்வூ தியத்தைப் பிடித்தம் செய்திடும் கால த்தை 15 ஆண்டுகளிலிருந்து 12 ஆண்டு களாகக் குறைத்திட வேண்டும், ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் முன்னணியில் நின்ற ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள பழி வாங்கல் நடவடிக்கைகளைக் கைவிட  வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்ட த்தின்கீழ் பிடித்தம் செய்திடும் இணைய தளத்தில் இருந்துவரும் சீர்கேடுகளைச் சரிசெய்திட வேண்டும்,  அனைத்து ஓய்வூதியர்களுக்கும் கருணைத் தொகை வழங்கிட வே ண்டும், ஓய்வூதியம் என்பது வருமானம் என்று கூறப்பட முடியாது என்பதால் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் வரு மான வரியிலிருந்து விலக்கு அளித்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலச் செயலாளர் எஸ்.ஆறுமு கம் நிறைவுரையாற்றினார். மாலையில் நடைபெற்ற கருத்த ரங்கத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி  பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம்  மாநிலச் செயலாளர் ஜே.கிருஷ்ண மூர்த்தி புதிய வரைவு தேசியக் கல்விக்  கொள்கை குறித்து கருத்துரை வழங்கி னார். ஜி.பூபதி நன்றி கூறினார்.