தஞ்சாவூர்,மார்ச் 19- வேங்கராயன்குடிக்காட்டில் கஜா புயலுக்கு பிறகு சீரமைக்கப் படாமல் விடப்பட்ட மின்மாற்றியால் வீடுகளில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் சேதமடைந்தன. தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றி யத்துக்குட்பட்ட வேங்கராயன் குடிக்காட்டில் கஜா புயலுக்கு பிறகு மின்மாற்றி சீரமைக்கப்படாமல் விடப்பட்டது. இதனால் குறைந்த ழுத்த மின்சாரத்தின் காரணமாக வீடுக ளில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் அவ்வப்போது வெடித்துச்சிதறு வதால் பொதுமக்கள் அவதிக்குள் ளாகியுள்ளனர். கொ.வல்லுண்டாம்பட்டு ஊராட்சிக் குட்பட்ட வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் கீழத்தெருவில் மின் மாற்றி உள்ளது. இதிலிருந்து 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும், இரண்டு குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகளுக்கும், 20-க்கும் மேற்பட்ட விவசாயத்துக்கான ஆழ் குழாய் பம்புசெட்டுகளுக்கும் ஒரே இடத்தில் உள்ள இரண்டு மின்மாற்றி யிலிருந்து தனித்தனியாக மின்சாரம் பிரித்து அனுப்பப்பட்டது. இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு கஜா புயலின் போது இரண்டு மின்மாற்றிகளும் சேதமடைந்தன. பின்னர் ஒரு மாதம் கழித்து ஒரு மின்மாற்றி மட்டுமே தற்காலிகமாக சீர மைக்கப்பட்டது, அதிலிருந்து பம்பு செட், வீடுகள், குடிநீர் தொட்டிகளுக் கான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரே மின்மாற்றியி லிருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படுவதால், போதிய மின்சா ரம் கிடைக்காமல் குறைந்தழுத்த மின் சாரமாக இருப்பதால் வீடுகளில் அவ்வப்போது எலக்ட்ரானிக் பொருட்களான டிவி., ப்ரிட்ஜ், மிக்சி, பல்புகள் ஆகியவை வெடித்து சிதறு வதால், பொதுமக்கள் அவதிப்படு கின்றனர். இதுகுறித்து ஊராட்சி மன்ற உறுப்பினர் த.வில்லப்பன் கூறுகை யில், எங்களது ஊரில் ஒரே இடத்தில் இரண்டு மின்மாற்றிகள் விவசாயத்து க்கு தனியாகவும், வீடுகளுக்கு தனி யாகவும் இருந்தது. கஜா புயலின் போது அவை சேதமானதால், ஒரு மின்மாற்றி மட்டுமே சீரமைத்தனர். மற்றொரு மின்மாற்றி சீரமைக்கப்படா மல் அப்படியே விட்டு விட்டனர். சீரமைக்கப்பட்ட ஒரு மின்மாற்றி யிலிருந்து விவசாயத்துக்கும், வீடுக ளுக்கும் என அதிகளவில் மின்சாரம் பிரித்து வழங்குவதால், போதிய மின்சாரம் கிடைக்கவில்லை. இத னால் அவ்வப்போது குறைந்தழுத்த மின்சாரமாகவே இருக்கிறது. அதிக மின்சாரம் வரும்போது, வீடுகளில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் வெடித்துச் சேதமா கிறது. நாங்களும் கடந்த ஓராண்டுகளாக மின்வாரியத்துறையிடம் பழுதான மின்மாற்றியை சீரமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வரு கிறோம். ஆனால் மின்சாரத்துறை யினர் அலட்சியமாக உள்ளனர்.. எனவே பழுதான மின்மாற்றியை மாற்றி, எங்களுக்கு சீரான மின்சா ரத்தை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.