tamilnadu

img

தொடர் மழையால் கருவாடு தொழில் பாதிப்பு தினசரி 300 பேர் வேலையிழப்பு

தஞ்சாவூர் டிச.8-  தஞ்சை மாவட்டம் சேதுபாவா சத்திரம், மல்லிப்பட்டினம் பகுதிகளில் தொடர் மழையால் கருவாடு காய வைக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள் ளது. இதனால் தினந்தோறும் 300க்கும் மேற்பட்டோர் வேலையிழந்து தவித்து வருகின்றனர். தஞ்சை மாவட்டம் கொள்ளுக்காடு தொடங்கி மல்லிப்பட்டினம், சேதுபாவா சத்திரம், மந்திரிபட்டினம், செம்பியன் மாதேவிப்பட்டினம் உள்பட 34 மீனவ கிராமங்களில் சுமார் 4,500 நாட்டுப்படகுகளும் மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவா சத்திரம் ஆகிய பகுதிகளில் சுமார் 134 விசைப்படகுகளும் மீன்பிடித் தொழி லில் ஈடுபட்டு வருகின்றன. இந்த படகுகளில் அன்றாடம் வரக்கூடிய இரால், நண்டு, மீன், கணவாய் போன்ற கடல் உணவுப் பொருட்களை உடனடியாக விற்பனை செய்தும், வெளியூர் மற்றும் வெளி  நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வரு கின்றனர். அதே சமயம் இதில் கழிவாகக் கூடிய மீன்களையும், சங்காயம் எனப்படும் சிறிய வகை மீன்களையும் வாங்கி துறைமுகங்களிலேயே காய வைத்து கருவாடு விற்பனை தொழி லும் செய்து வருகின்றனர். உணவிற்கு பயன்படும் கருவாடு களை விட கோழிகளுக்கு தீவனமாக பயன்படும் சிறிய வகை சங்காய வகை மீன்களுக்கு பெரும் வரவேற்புள்ளது. இவ்வகை மீன்களை மொத்தமாக வாங்கி காய வைத்து கிலோ 8 ரூபாய்  முதல் 10 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த கருவாடுகள் அனைத்தும் நாமக்கல் போன்ற பகுதிகளுக்கு கோழித் தீவனத்திற்காக அனுப்பப்படுகிறது.  மல்லிப்பட்டினம் மற்றும் சேதுபாவாசத்திரம் ஆகிய துறை முகங்களில் மட்டும் கருவாடுகளை தரம் பிரிக்க, காயவைக்க, சாக்கு மூட்டை களில் கட்டி லாரிகளில் ஏற்றுவதற்கு என அன்றாடம் 300 க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இந் நிலையில் கடந்த ஒரு மாதமாக இந்த  பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், வெயில் இன்றி கருவாடு காய வைக்கும் பணி மிகவும் பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் தினந்தோறும் வேலை செய்து வந்த 300 க்கும் மேற்பட்டோர் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.

;