tamilnadu

img

தமிழக முதல்வரின் நூறு ஏரிகள் திட்டம் காவிரி டெல்டாவை வஞ்சிப்பதாக உள்ளது - எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., பேட்டி

தஞ்சாவூர், ஜூலை 22- தமிழக முதல்வரின் நூறு ஏரிகள் திட்ட அறிவிப்பு என்பது காவிரி டெல்டா வை மறைமுகமாக வஞ்சிப்பதாக உள்ளது என தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் தெரிவித்தார். தஞ்சாவூரில் திங்களன்று செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது: தமி ழக முதல்வர் தனது தொகுதியில் நடை பெற்ற மடிக்கணினி வழங்கும் விழா வில், மேட்டூர் உபரி நீரைச் சேமிக்க ரூ. 565 கோடியில் நூறு ஏரிகள் உரு வாக்கப்படும் என்றும், இதன் மூலம், மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்க கிரி ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதி கள் பயன்பெறும் எனவும் கூறி யுள்ளார். மேக்கேதாட்டு அணையைக் கட்டு வதற்குக் கர்நாடக அரசு என்ன கார ணத்தைக் கூறுகிறதோ, அதே கார ணத்தை முதல்வர் கூறுகிறார். இது, காவிரி பாசனப் பகுதிகளான தஞ்சா வூர், நாகை, திருவாரூர், புதுக் கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங் களை மறைமுகமாக வஞ்சிப்பதாக உள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்க ளில் உள்ள ஏரி, குளங்களை முறை யாகத் தூர் வார நடவடிக்கை எடுத் தாலே, உபரி நீரைச் சேமிக்க முடியும். மேலும், வடகிழக்குப் பருவகாலத்தில் ஏற்படும் வெள்ளப் பாதிப்பையும் தடுக்க முடியும்.  காவிரி டெல்டா விவசாயிகளைக் கர்நாடகம் வஞ்சிப்பது போல, தமிழக முதல்வரும் தான் பொறுப்பேற்ற பிறகு இன்னொரு கோணத்தில் வஞ் சிப்பதாக உள்ளது. மேலும், காவிரி நடு வர் மன்ற வழிகாட்டு நெறிமுறைகளை முதல்வர் மீறினால், அது, மறைமுக மாக கர்நாடகம் மீறுவதற்கு உதவியாக அமைந்துவிடும். மேட்டூர் அணை உபரி நீரைச் சேமிக்க நூறு ஏரிகளை உரு வாக்குவது என்பது காவிரி பாச னத்துக்கு உட்பட்ட பகுதியில் புதிய பாசனத் திட்டம் உருவாக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட விவசாயிகள் மத்தி யில் நிலவுகிறது. இது, காவிரி பாசனப் பகுதியை மறைமுகமாக பாலைவனமாக மாற்று வதற்கும், மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு உதவுவதாகவும் உள்ளதாக விவசாயிகள் மத்தியில் சந்தேகம் நிலவுகிறது. எனவே, தமி ழக முதல்வர் இத்திட்டத்தைக் கை விட்டு, ரூ. 565 கோடியை காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்க ளைத் தூர் வாருவதற்குப் பயன்படுத்தி னால், அவரது உயர்ந்த நோக்கம் நிறை வேறும். இதன் மூலம், காவிரி நீர் ஒரு சொட்டுக் கூட வீணாகாது. தமிழக முதல்வர் மேட்டூர் அணை நீர் பகிர்வு கொள்கையைக் கையாளும் முறையே, விவசாயிகளின் உரிமை யைச் சிதைப்பதாக உள்ளது. ஆண்டு தோறும் ஜன. 28-ம் தேதி மேட்டூர் அணை மூடப்பட்ட பிறகு, அவசர அவசியத்தின் அடிப்படையில் ஓரிரு முறை மட்டுமே அணை திறக்கப்படும். ஆனால், முதல்வர் தனது தொகுதி என்பதால், வாய்க்காலில் நாள்தோறும் 1,000 கன அடி தண்ணீரை திறந்துவிட்டுள்ளார். மேட்டூர் அணை நிர்வாகம் தஞ்சா வூர் மாவட்ட ஆட்சியரிடமும், தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் தலைமைப் பொறியாளரிடமும் இருந்தது. ஆனால், இப்போது மேட்டூர் அணை யின் நிர்வாகம் முதல்வரின் சிறப்புப் பிரிவுக்கு மாறிவிட்டது. மேட்டூர் அணை யைத் திறப்பது குறித்த முடிவை அவரே மேற்கொள்கிறார். பழைய முறைப்படி மேட்டூர் அணை நிர்வாகத்தை தஞ்சா வூர் மாவட்ட ஆட்சியரிடமும், பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாள ரிடமும் ஒப்படைக்க வேண்டும்.  எட்டு வழிச்சாலைத் திட்டத்தால் சேலம் மாவட்ட மக்களிடையே ஏற்பட் டுள்ள அதிருப்தியை மறைத்து, திருப்தியை ஏற்படுத்துவதற்காகத் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளைப் பழிவாங்கும் விதமாக முதல்வரின் பேச்சு உள்ளது” என்றார்.