கும்பகோணம், ஜூலை 25- விவசாயிகளுக்கு விரோ தமான மத்திய அரசின் அவ சர சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்துக் கட்சிகளின் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஒரு கோடி கையெ ழுத்து இயக்கம் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
கும்பகோணம்
கும்பகோணத்தில் மதி முக விவசாய அணி மாவட்ட தலைவர் முருகன் தலை மை வகித்தார். திமுக மாவட்ட செயலாளர் கல்யா ணசுந்தரம் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறு ப்பினர்கள் ஆர்.மனோகரன், சின்னை.பாண்டியன், சி.ஜெ யபால், விவசாய தொழிலா ளர் சங்க மாநிலக்குழு உறு ப்பினர் என்.நாகராஜன், சிபிஎம் நகர செயலாளர் செ ந்தில்குமார் ராஜகோபாலன் உள்ளிட்ட அனைத்து கட்சி விவசாயிகள் கையெ ழுத்திட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
பொன்னமராவதி
பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு மா ர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் என்.பக்ருதீன் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடை பெற்றது. பி.உசிலம்பட்டி யில் அழகு தலைமையிலும், உடையாம்பட்டியில் பி.ராம சாமி தலைமையிலும், திரு க்களம்பூரில் வி.ஆர்.எம்.சாத்தையா தலைமையிலும், அரசமலையில் ஏ.எல்.பிச்சை தலைமையிலும், காரையூ ரில் ஏ.சௌந்தரராஜன் தலை மையிலும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.