தஞ்சாவூர், ஜூலை 16- ஒரத்தநாடு அருகே கூரையை ஒட்டி தாழ்வாகச் செல்லும் உயர் அழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்கம்பியை அகற்றுமாறு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரி க்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்டத் தலை வர் ஆம்பல் துரை ஏசுராஜா பாப்பாநாடு உதவி மின்பொறியாளரிடம் நேரில் அளித்துள்ள கோ ரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: “தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா வில், ஆம்பலாபட்டு தெற்கு குடிக்காடு தெரு வில், கடந்த ஜூலை 11 அன்று ரெங்கசாமி என்பவரின் கூரையின் மேல் செல்லும், உயர ழுத்த மின்சார கம்பியில் தீப்பொறி ஏற்பட்டு வீடு தீப்பற்றியது. உடனடியாக அக்கம்பக்க த்தினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து மின்வாரிய அலுவ லகத்திற்கு தொலைப்பேசி வாயிலாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜா புயலில் மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் மிகப்பெரிய அளவில் சேதம் அடைந்தது. அப்போது மின் மாற்றி, மின் கம்ப ங்களை மறு சீரமைக்கும் பணிகள் நடை பெற்று வந்தது. இதில் ரெங்கசாமி வசிக்கும் தெருவில் உள்ள மின்மாற்றிக்கு, வரக்கூ டிய உயர் அழுத்த மின்சாரக் கம்பி, முன்னர் வயல் வெளிப் பகுதி வழியாகச் சென்றது. இந்நிலையில், புயலில் சேதமடைந்த மின் கம்பிகளுக்கு பதிலாக, புதிய மின்கம்பிகள் அமைக்கும் பணி நடைபெற்ற போது, வீட்டின் கூரையை ஒட்டி மின்கம்பி செல்கி றது. இதனால், தீவிபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த மின்கம்பிகளை வேறு பாதையில் மாற்றி அமைத்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.