தஞ்சாவூர், மார்ச் 24- வெளிநாடுகளிலிருந்து தஞ்சா வூர் மாவட்டத்திற்கு வந்துள்ள 516 பேர், அவர்களின் வீடுகளில் தனி மைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறை மூலம் 28 நாட்களுக்கு தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது: வெளிநாடுகளி லிருந்து வருபவர்களின் விவரங்கள் விமான நிலையங்களிலிருந்து பெறப்பட்டு, அவர்கள் வரும் நாடு களில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய் பாதிப்பைப் பொறுத்து மூன்று பிரிவுகளாக வகைப்படுத்துவர். மார்ச் 22 வரை மாவட்டத்திற்கு வந்துள்ள 629 நபர்கள் சுகாதாரத் துறை மூலம் தொடர்ந்து கண்கா ணிக்கப்பட்டு, இதில் 106 நபர்கள் 28 நாட்கள் முடிவுற்ற நிலையில், 516 நபர்கள் சுகாதாரத் துறை மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூர்களிலிருந்து மாவட்டத்திற்கு வந்துள்ள 47 பேர் சுகாதாரத் துறை கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் நோய் தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டால், அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, பாதிப்பு இல்லை என்றால் மீண்டும் ஆம்புலன்ஸ் மூல மாகவே தங்கள் இருப்பிடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றனர். வெளிநாட்டிலிருந்து வந்துள்ள வர்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும் பொது நிகழ்ச்சிகளில் அல்லது குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 28 நாட்கள் கண்காணிப்புக்கு உள்ளாகும் நபர்களுக்கு சுகாதாரத் துறை மூலம் இடது கையில் முத்திரை அச்சு வைக்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்துள்ள 516 நபர்கள் சுகாதாரத்துறை மூலம் தற்போது தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு வருகின்றனர். சுகாதாரத் துறையின் அறிவுறுத்த லின்படி, கொரோனா நோய்த்தொற்று அறிகுறி உள்ளதால் தனிமைப் படுத்தப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள், முகவரி, எண்ணிக்கை மற்றும் கண்காணிப்பு காலம் ஆகிய விவரங்கள் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுடைய வீடுகளின் முன் புறம் ஒட்டப்பட்டுள்ளது. கொரோனா நோய்தொற்றுடன் தனிமைப் படுத்தப்பட்ட நபர்களின் வீடு களுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பால், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அத்தியாவசிய பொ ருட்கள் வாங்கும் கடைகளில் மூன்று மீட்டர் இடைவெளிவிட்டு வரிசையில் நின்று, பொருட்களை வாங்க வேண்டும் என ஆட்சியர் அறி வுறுத்தி உள்ளார்.