தஞ்சாவூர், பிப்.16- தஞ்சாவூர் திங்களூர் நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய ஏதுவாக மாவட்டம் முழுவதும் 434 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் எங்கெங்கு கொள்முதல் நிலையங்கள் வேண்டும் என கோரிக்கை விடுத் தால் அங்கு பரிசீலித்து உடனடியாக கூடுதல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டில் ஈடுபட்ட 16 பட்டியல் எழுத்தர்களும், 3 உதவியாளர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 9-ஆம் தேதி மட்டும் மாவட்டத்தில் 7,577 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள் ளது. தற்போது மாவட்டத்தில் 1,350 நெல் அறுவடை இயந்தி ரங்கள் அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் அறிவித்த கூலியை அறுவடை இயந்திரத்துக்கு விவசாயிகள் தர வேண்டும். இதில் கூடுதலாக கேட்டால் மாவட்ட ஆட்சி யரிடம் முறையிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் 6 லட்சம் மெ.டன் கொள்முதல் இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. நெல் தூற்றும் இயந்திரத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் இறந்துள்ளார். எனவே பணியாளர்கள் பாது காப்பாக பணியாற்றுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது என்றார்.