கும்பகோணம், மே 30- தஞ்சை மாவட்டம் திருபுவனம் சிஐடியு அலுவலகத்தில் சிஐடியு ஏஐடியுசி தமாகா கைத்தறி நெசவாளர் தொழிலா ளர் சங்கங்களின் கூட்டமைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்க மற்றும் தனியார் உள்ளிட்ட கைத்தறி பட்டு நெசவு தொழில் சார்ந்த அனைவரும் ஊரடங்கால் கடந்த 80 நாட்களாக வேலையின்றி வருமானமின்றி வாழ்வாதாரம் இழந்து மிகவும் பாதிக்கப்பட்டு சிரமத்தில் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் நிவாரண உதவியாக ரூ ஐந்தாயிரம் வழங்கக் கோரி வருகிற ஜூன் 1 திருபு வனத்தில் உள்ள தமிழ்நாடு கைத்தறி துணிநூல் துறை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு மாவட்ட அளவிலான கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சா.ஜீவபாரதி என்.பி.நாகேந்திரன் பக்கிரிசாமி கே எஸ் சேது ஆர். சேகர் நரசிம்மன் ஏஐடியுசி ஜி. மணி மூர்த்தி என்.எஸ். ஹரிதாஸ் பலர் கலந்து கொண்டனர்.