tamilnadu

img

ஹெச்.ராஜாவை  கைது செய்ய கோரிக்கை ....

தஞ்சாவூர்:
தஞ்சவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலம் ஊராட்சி மன்ற வளாகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் கிளைத் தலைவர், செயலாளர்கள் கூட்டம் ஒன்றியத் தலைவர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது. அமைப்பின் மாவட்ட செயலாளர் பி.எம்.இளங்கோவன், ஒன்றியப் பொருளாளர் வைதேகி, துணைச் செயலாளர் வினோலியா, தெட்சிணாமூர்த்தி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாற்றுத் திறனாளிகள் கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறவுள்ள, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நவ.17 அன்று, தஞ்சை மாவட்டத்தில்15 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, மாற்றுத் திறனாளிகளை தரக்குறைவாக பேசிவரும் பா.ஜ.க தமிழ்நாடு தலைவர்களில் ஒருவராகஇருக்கக் கூடிய ஹெச்.ராஜா மீது வழக்கு பதிந்து கைது செய்திட வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.