தஞ்சாவூர், ஜூலை 18- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் முன்னோடியும், பெண்ணுரிமைப் போராளியு மான, அன்னை ருக்மணி அம்மாள் நினைவு தினத்தையொட்டி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ரேஷன் கடை முன் பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அனைத்து ரேசன் கார்டுக்கும் அரிசி மற்றும் 21 அத்தியாவசி யப் பொருட்கள் அடங்கிய தொகு ப்பை டிசம்பர் மாதம் வரை இல வசமாக வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட் டம் நடைபெற்றது. தஞ்சை ஒன்றி யம் கபிலன் நகரில் ஒன்றியத் தலைவர் வனரோஜா தலைமையி லும், தஞ்சை மாநகரில் பூக்காரத் தெருவில் இரு இடங்களிலும், காந்தி நகர், பர்மா காலனியில் தலா ஒரு இடங்களிலும் மாநக ரச் செயலாளர் வசந்தி தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒரத்தநாடு பஞ்சநதிக்கோட் டையில் ஒன்றியச் செயலாளர் கே.மலர்கொடி தலைமையிலும், மதுக்கூர் மூத்தாக்குறிச்சியில் ஒன்றியச் செயலாளர் கலாவதி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாபநாசம் ஒன்றி யத்தில் இரு இடங்களில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பி.விஜ யாள் தலைமை வகித்தார். அம்மாபேட்டை ஒன்றியம் இராராமுத்திரைக் கோட்டையில் மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி தலைமையிலும், ஒன்பத்துவேலியில் கிளைத் தலைவர் மார்க்கெட் தலைமை யிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. வசந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே போல் பூத லூர், அம்மாபேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்க ளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. திருச்சிராப்பள்ளி இதே போல் திருச்சி திரு வெறும்பூர் அடுத்த பூலாங்குடி கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் திற்கு ஒன்றிய செயலாளர் மாரி யம்மாள் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி புறநகர் மாவட்ட செயலாளர் மல்லிகா பேசினார். முன்னதாக பூலாங்குடி யில் மாதர் சங்க புதிய கிளை துவக்க விழா நடைபெற்றது.