கும்பகோணம், நவ.6- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணம் அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு இணைந்து டெங்கு ஒழிப்பு நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் அரசினர் கலைக் கல்லூரியில் நடை பெற்றது. கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சா.லதா வரவேற்றார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சிவனே சன் தலைமை ஏற்றார். ஆயுர்வேத பிரிவு உதவி மருத்துவ அலுவலர் ரிஷிகேஷ், சித்தா பிரிவு உதவி மருத்துவ அலுவலர் பாஸ்கரன், மருந்தாளுநர் மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி பேரா சிரியர்கள் மற்றும் மாணவ-மாணவி களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங் கப்பட்டது. மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ‘நிலவேம்பு குடிநீரை பருகுவோம்; டெங்கு இல்லாத வாழ்வை தொடர்வோம்’ என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
பொன்னமராவதி
பொன்னமராவதி வி.என்.ஆர். கட்டுமான நிறுவனம், பொன்னமரா வதி அரிமா சங்கம், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி கட்டுமான பொறி யாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது. பொன்னமராவதி அரிமா சங்கப் பொருளாளர் பொறி யாளர் வி.என்.ஆர் நாகராஜன் தலை மையில் நடைபெற்ற முகாமில் சிக்குன் குன்யா, வைரஸ் காய்ச்சல், டெங்கு, சளி, இருமல், கபத்தைப் கட்டுப்படுத் தும் 9 மூலிகைகள் அடங்கிய இலவச நிலவேம்பு குடிநீர் வாராப்பூர், பூவா ளபட்டி, கட்டையம்பட்டி காலனி, கட்டையம்பட்டி அரசுப்பள்ளி அருகே, குரும்பலூர், சடையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அரசு பள்ளி மாண வர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.