தலித் மக்கள் அமரக் கூடாது என்பதற்காக இடிக்கப்பட்ட பேருந்து நிழற்குடை இருக்கை மீண்டும் நிறுவப்பட்டது
புதுக்கோட்டை, செப்.29- தலித்துகள் இருக்கையில் அமரக்கூடாது என்ற சாதி ஆதிக்க வெறியில் இடிக்கப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடை இருக்கைகள் மீண்டும் நிறுவப்பட்டது. இது தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் போராட்ட அறைகூவலுக்குக் கிடைத்த வெற்றியாகும். புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோவில் ஆருகே உள்ளது தெம்மாவூர் கிராமம். கடந்த 47 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இங்கே செல்வாக்கு உள்ளது. இங்கு பல்வேறு வடி விலான தீண்டாமைக் கொடுமைகள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே மார்க்சிஸ்ட் கட்சியின் வலுவான போராட்டத்தால் முறியடிக்கப்பட்டது. எனினும் தலித்துகளுக்கு விவசாய வேலை வழங்க மறுப்பது உள்ளிட்ட நூதனமான வடிவங்களில் சாதி வெறியர்கள் வன்மத்தை கடைப்பிடித்தே வந்துள்ளனர். தலித் இளைஞர்களும் பெண்களும் நாகரிக உடையணிந்து உயர்கல்விக்கும், வெளியூருக்கு வேலைக்கும் செல்வது சில சாதிவெறியர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது. அதிலும் பேருந்து நிழற்குடையில் உள்ள இருக்கையில் தலித்துகள் அமர்வதை அவர்களால் ஜீர ணிக்கவே முடியவில்லை. இருக்கை இருந்தால் தானே அமர முடியும் என்று முடிவெடுத்த சாதி ஆதிக்க வெறியர்கள் பேருந்து நிழற்குடை யில் இருக்கைகளே இல்லாமல் பார்த்துக்கொண் டனர்.
இதனால், தெம்மாவூர் பேருந்து நிழற்குடை யில் கடந்த பல வருடங்களாக இருக்கைகளே இல்லாமல் இருந்துள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு அங்கு புதிதாக நிழற்குடை அமைக்கப் பட்டது. அமைக்கப்பட்ட சில நாட்களிலேயே அங்கிருந்த இருக்கைகளை சாதி ஆதிக்க வெறியர்கள் உடைத்து அகற்றினர். முகப்பு பலகையில் தங்கள் சாதியின் பெயரை எழுதி வைத்து தங்கள் வெறியை தீர்த்துக்கொண்டனர்.
தேநீர் கடைகளில் நவீன தீண்டாமை
செங்கொடி இயக்கத்தின் போராட்டத்தால் கடந்த காலங்களில் தேநீர் கடைகளில் தலித்து கள், முத்தரையர்கள், கள்ளர்கள் என ஒவ்வொரு சாதியினருக்கும் ஒரு குவளை முறை இருந்தது ஒழிக்கப்பட்டது. ஆனால், தற்பொழுது கண்ணா டிக் குவளையில் பூப் போட்ட கிளாஸ், பூ போடாத கிளாஸ் அல்லது பூவுக்குள்ளேயே வித்தியாசம் வைத்து கொடுப்பது என நூதனமான வடிவங் களில் தீண்டாமையை காத்து வந்துள்ளனர். இந்நிலையில் செப்டம்பர் 30(இன்று) தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நேரடி நடவடிக்கையில் இறங்குவதற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறைகூவல் விடுத்தது. இதனைத் தொடர்ந்து தெம்மாவூரில், இடிக்கப்பட்ட பேருந்து நிழற் குடையில் உள்ள இருக்கைகளை மீண்டும் அமைக்கவும், தேநீர் கடையில் இரட்டைகுவளை முறையை எதிர்த்தும் நேரடி இயக்கம் நடத்து வது என முடிவெடுக்கப்பட்டது.
இதற்காக மாவட்டம் முழுவதும் தீ.ஒ. முன்னணியும் அதன் சகோதர அமைப்புகளும் ஆயிரக்கணக்கானோரை களத்தில் இறக்கு வது எனவும் முடிவெடுக்கப்பட்டது. நிலைமை யின் தீவிரத்தை உணர்ந்த மாவட்ட நிர்வா கம் போராட்டத்திற்கு முன்பாகவே பிரச்சனை யைத் தீர்த்துவைக்க முன்வந்தது. இதனைத் தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலை வர்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை சில தினங்களுக்கு சந்தித்தனர். அப்போது தீண்டா மை வடிவங்களை முடிவுக்குக் கொண்டுவர ஆட்சியர் உறுதியளித்தார். உறுதியளித்தபடி சனிக்கிழமையன்றே வருவாய்த் துறையின ரால் நிழற்குடையில் இருக்கை அமைத்துக் கொடுக்கப்பட்டது. தேநீர் கடைகளிலும் இரட்டை குவளை முறை ஒழிக்கப்பட்டது.
நன்றி அறிவிப்புக் கூட்டமாக மாறிய போராட்டம்
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோரிக்கையை ஏற்று விரைந்து நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு தெம்மாவூர் தலித் மக்கள் சார்பாக ஞாயிற்றுக்கிழமை நன்றி அறிவிப்புக் கூட்டம் நடைபெற்றது. தீ.ஒ.மு மாவட்டத் தலைவர் எம்.உடையப்பன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கலந்துகொண்டு மாநில உதவிப் பொதுச் செயலாளர்கள் சின்னை பாண்டியன், மு.கந்தசாமி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தீஒமு மாவட்டச் செயலாளர் சி.அன்பு மணவாளன், விதொச மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர், விச மாவட்டச் செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.சண்முகம், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, மாண வர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்த னன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.தங்க வேல் மற்றும் எஸ்.பீமராஜ், சி.ஜீவானந் தம், அ.பாலசுப்பிரமணியன், பி.மருதப்பா, த.அன்பழகன், நெருப்பு முருகேஷ், எம்.ஆர்.சுப்பையா, சந்திரா, ரவீந்திரன், கவிபாலா, ஓவியா உள்ளிட்டோர் பேசினர்.
நன்றி அறிவிப்புக் கூட்டத்தை தொடர்ந்து மேற்படி பேருந்து நிறுத்ததில் மார்க்சிஸ்ட் கட்சி யின் செங்கொடியை சின்னை பாண்டியன் ஏற்றி வைத்தார். பின்னர் தலித் பகுதியில் உள்ள பெண்களையும் ஆண்களையும் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிழற்குடை இருக்கை யில் தலைவர்கள் அமர வைத்தனர். இந்த நிகழ்ச்சி தலித் பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சி யையும் தெம்பையும் ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.
(ந.நி.)