தஞ்சாவூர், பிப்.26- தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், மன நிலை பாதிக்கப்பட்டவர், குடும்பத்தினரால் கைவிட ப்பட்டு தனியாக வசிக்க கூடி யவர்கள், தொழுநோயாளி களில் ஊனமுற்ற தன்மை மற்றும் பிற காரணங்களால் ஆதார் எண் எடுக்க இயலாத நிலையில், குடும்ப அட்டை யின்றி, நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் பெற முடியாமல் உள்ளவர்களுக்காக, பிப்.29 (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 1 மணி வரை, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் ஆதார் எண் எடுப்பதற்கு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. ஆதார் எண் எடுக்க இயலாதவர்கள் அதுசமயம் தங்களது விண்ணப்பத்தி னை, இயலாமைக்கான சான்றாவணங்களுடன், மா வட்ட வழங்கல் அலுவல ருக்கு முகவரியிட்டு நேரில் வழங்கலாம். மேலும், ஆதா ரங்களை விண்ணப்பத்துடன் இணைத்து மாவட்ட வழ ங்கல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கம், தஞ்சாவூர்-613010 என்ற முகவரிக்கு விண்ணப்ப த்தினை அஞ்சல் மூலமா கவும் அனுப்பி வைக்கலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சி யர் ம.கோவிந்த ராவ் தெரி வித்துள்ளார்.