தஞ்சாவூர், மார்ச் 1- தஞ்சை மாவட்டம் சின்ன தெற்குக் காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் கல்விச் சீர் விழா நடைபெற்றது. விழா விற்கு வட்டாரக் கல்வி கோ.ரவிச்சந்தி ரன் தலைமை வகித்தார். கிராம மக்கள் சார்பில், பள்ளிக்குத் தேவையான, மேஜை, நாற்காலி, பீரோ உள்ளிட்ட ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசைப் பொருட் கள் தலைமை ஆசிரியை சி.சரஸ்வதி, உதவி ஆசிரியை அ.மரியசுகந்தி ஆகி யோரிடம் வழங்கினர். நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட சார்-ஆட்சியர் சிவகுரு பிரபா கரன், அவரது மனைவி டாக்டர் கிருஷ்ண பாரதி, ஒன்றியக் கவுன்சிலர் முத்து வேல், ஊராட்சி தலைவர் ராசாக் கண்ணு, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜோதி மகாலிங்கம், கிராமக் கல்வி குழு தலைவர் அஞ்சம்மாள் நாக ராஜ், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி ஏ.ஞானம்பாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் ஊரா ட்சி துணைத் தலைவர் தனபால், மதன்பட்டவூர் ஊ.ஒ.தொ.ப தலை மையாசிரியை கலைச்செல்வி, சார் -ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் ஆகி யோர் கல்விப் புரவலர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர்.