tamilnadu

img

குடிநீரை வியாபாரமயமாக்கும் திட்டத்தை கைவிடுக! தஞ்சை மாவட்டம் முழுவதும் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஆக.4- மத்திய அரசின் ஜல்சக்தி மிஷன் திட்டத்தின் பெய ரில், தற்போது உள்ள குடிநீர் வினியோக முறையை மாற்றி, கட்ட ணம் செலுத்தி குடிநீர் பெறும் நிலையை ஒவ்வொரு பகுதி யிலும் அரசு மேற்கொண்டு வருகிறது.  இதன் மூலம் குடிநீர் இணைப்புக்கு ரூ.3,000 முன்வைப்பு  தொகை செலுத்த வேண்டும். முதல் தவணையாக ரூ.1,000 உடனடியாக செலுத்த வேண்டும். குடிநீர் இணைப்புக்கு மீட்டர் பொருத்தி, பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் செலுத்து வது போன்ற மக்கள் நலனுக்கு எதிரான செயல்களில் அரசு  ஈடுபட்டு வருகிறது.  ‘கொரோனா ஊரடங்கு காலத்தில், வருமானம் இன்றி  தவிக்கும் குடும்பங்களின் நிலை கருதி, குடிநீர் இணைப்பு க்கு கட்டணம் வசூலிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும். குடிநீருக்கு மீட்டர் பொருத்தக் கூடாது. அனைவருக்கும் இல வசமாக குடிநீர் வழங்க வேண்டும்’ என வலியுறுத்தி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சை மாவட்டம் முழுவதும் அனை த்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கிராம ஊராட்சிகள்  முன்பு செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தஞ்சாவூர் 
தஞ்சாவூர் பனகல் கட்டிடம், ஊராட்சி ஒன்றிய அலு வலகம் முன்பு சிபிஎம் மாநகரச் செயலாளர் என்.குருசாமி  தலைமை வகித்தார். தஞ்சாவூர் ஒன்றியம் நீலகிரியில் ஆர். கலியமூர்த்தி, ராமநாதபுரத்தில் எஸ்.பஞ்சவர்ணம், ஏ.குழ ந்தையம்மாள், மருதகுடியில் கே.சௌந்தர்ராஜன், ஆலக்கு டியில் டி.கோவிந்ரராஜூ, கல்விராயன்பேட்டையில் ஏ.புக ழேந்தி, மாத்தூரில் அலெக்ஸ் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கும்பகோ ணம் திருவிடைமருதூர் பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கும்பகோணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்திற்கு ஒன்றியச் செயலாளர் பி.ஜேசுதாஸ் தலைமை வகித்தார். திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜீவ பாரதி தலைமை வகித்தார்.
பட்டுக்கோட்டை 
பட்டுக்கோட்டை தலைமைத் தபால் நிலையம் அருகே சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகி த்தார். கரம்பயத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.செல்வம்,  வீரக்குறிச்சியில் பெஞ்சமின், நம்பிவயலில் பாலசுப்பிரமணி யன், தாமரங்கோட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட்ட துணைத் தலைவர் ஏ.கோவிந்தசாமி தலைமையில்  நடைபெற்றது. பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.வி.குமாரசாமி தலை மை வகித்தார்.
சேதுபாவாசத்திரம் 
சேதுபாவாசத்திரத்தில் பி.பெரியண்ணன், குருவிக்கர ம்பையில் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ். வேலுச்சாமி, கெங்காதபுரத்தில் எம்.வேலுச்சாமி, மரக்காவலசையில் நா கேந்திரன், ஊமத்தநாட்டில் பி.கே.சண்முகம், பெருமக ளூரில் கணேசன், மணக்காட்டில் மாவட்டக்குழு உறுப்பினர்  வழக்கறிஞர் வீ.கருப்பையா தலைமையில் நடைபெற்றது. மதுக்கூர் ஒன்றியம் தெற்கு வாட்டாகுடி உக்கடை ஊராட்சி  மன்ற அலுவலகம் முன்பு ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ். சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.  கீழக்குறிச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர் கே.லெட்சு மணன் தலைமை வகித்தார். வாட்டாகுடி வடக்கில் கிளைச் செயலாளர் முருகவேல், அத்திவெட்டியில் கிளைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையிலும், திருவோ ணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கட்சியின் ஒன்றி யச் செயலாளர் பி.கோவிந்தராஜூ தலைமையிலும் நடை பெற்றது.
ஒரத்தநாடு 
ஒரத்தநாடு, ஒக்கநாடு, கீழையூர் ஆகிய இடங்களில் ஒன்றியச் செயலாளர் என்.சுரேஷ்குமார் தலைமை வகி த்தார். திருவையாறில் பிரதீப் ராஜ்குமார், செந்தலை யில் மாவட்டக்குழு உறுப்பினர் பழனிஅய்யா, அம்மைய கரத்தில் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா ஆகியோர் தலை மையிலும், பூதலூரில் ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், செங்கிப்பட்டியில் தமிழரசன், புதுக்குடியில் விஜயகுமார், வெண்டையம்பட்டியில் எஸ்.வியாகுலதாஸ் ஆகியோர் தலை மையில் நடைபெற்றது.
பூதலூர் வடக்கு 
பூதலூர் வடக்கு ஒன்றியம் திருக்காட்டுப்பள்ளியில் கே. காந்தி, முல்லைக்குடியில் முருகேசன், ஒரத்தூரில்  கரிகாலன், பாதிரக்குடியில் சம்சுதீன், திருச்சென்னம்பூண்டி யில் பன்னீர்செல்வம், பழமார்நேரியில் செபஸ்தியார் ஆகி யோர் தலைமையில் நடைபெற்றது. அம்மாபேட்டையில் வி.ரவி, மாரியம்மன் கோவிலில் வி.தங்கையன், கோவிலூ ரில் ஏ.செல்வராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.  இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நடை பெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து  கொண்டனர்.