tamilnadu

img

மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிடுக! விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜூலை 27- பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், விவசாயிகளை ஒடுக்கும் வகையிலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சாரம் மற்றும் வேளாண் அவசர சட்ட ங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் சங்கங்கள்  சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் 
தஞ்சை ரயிலடியில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவ ட்டச் செயலாளர் கோ.நீலமேகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேராவூரணி பெரியார் சிலை அருகில் விவசா யிகள் சங்க மாவட்டச் செயலாளர் பா.பாலசுந்தரம் தலைமை  வகித்தார்.  ஒரத்தநாடு ஆம்பலாபட்டு, ஒக்கநாடு கீழையூர், கண்ண ந்தங்குடி மேலையூர், பாப்பாநாடு, திருமங்கலக்கோட்டை, நெய்வாசல், தொண்டராம்பட்டு உள்ளிட்ட 11 இடங்களில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்ண த்தங்குடியில் வெங்கடேசன், பொறியாளர் ப.இராமசாமி தலைமையிலும், பூவத்தூர் கிராமத்தில் திமுக ஒன்றியப் பெருந்தலைவர் பார்வதி சிவசங்கர், முன்னாள் ஊராட்சி  மன்றத் தலைவர் பழனிசெல்வம், காவிரிப் படுகை பாதுகாப்பு  கூட்டியக்கம் பிரசன்னா ஆகியோர் தலைமையிலும், திரு மங்கலக்கோட்டை மேலையூர் கிராமத்தில் காவிரிப் படுகை  பாதுகாப்பு கூட்டியக்கம் சக்தி மற்றும் முரளி தலைமையி லும், பாப்பாநாட்டில் சிபிஐ ஒன்றியச் செயலாளர் சீனி.முரு கையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கருணாநிதி, மோ கன்தாஸ் ஆகியோர் தலைமையிலும் நடைபெற்றது.
பூதலூர்
பூதலூர் வடக்கு ஒன்றியம் திருக்காட்டுப்பள்ளி, முல்லை க்குடி, ஆற்காடு, ஒரத்தூர், பழமானேரி, கடம்பங்குடி, திரு ச்சென்னம்பூண்டி, பாதரக்குடி, தோகூர், கல்லணை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பூதலூர் தெற்கு ஒன்றியம் செங்கிப்பட்டியில் சங்கப் பொறுப்பாளர் சி.பாஸ்கர் தலை மை வகித்தார். பூதலூர் நான்கு ரோட்டில் சமவெளி விவசாயி கள் இயக்கம் பழனிவேல்ராஜன் தலைமை வகித்தார். சேது பாவாசத்திரம் ஒன்றியம் மணக்காடு கிராமத்தில் விவசாயி கள் சங்க பொறுப்பாளர் வீ.கருப்பையா தலைமை வகித்தார்.  திருவையாறு ஒன்றியம், கண்டியூரில் தமிழ்நாடு விவசாயிகள்  சங்க மாவட்டப் பொருளாளர் எம்.பழனி அய்யா தலைமை  வகித்தார்.
பட்டுக்கோட்டை 
பட்டுக்கோட்டை ஒன்றியம் தாமரங்கோட்டையில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு தலைமை வகித்தார். அம்மாபேட்டை ஒன்றியம் இராராமுத்திரைக் கோட்டையில் விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் கே.முனியாண்டி தலைமை வகித்தார்.
கும்பகோணம்
திருவிடைமருதூரில் விவசாயிகள் சங்க பொறுப்பாளர்  விஸ்வநாதன், முருகேசன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஜீவ பாரதி, மாவட்டக் குழு உறுப்பினர் பக்கிரிசாமியும், பாபநா சத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செய லாளர் பி.எம். காதர்உசேன், மாலாபுரம் பகுதிகளில் மாவ ட்டக் குழு உறுப்பினர் ஆர்.கஸ்தூரிபாய், ஒன்றியச் செயலா ளர் வி.முரளிதரன், பசுபதிகோவிலில் ஒன்றியப் பொருளாளர்  ஆர்.தங்கராசு உட்பட கும்பகோணம், பாபநாசம், திருப்ப னந்தாள் பகுதிகளில் விவசாயிகளின் வீடுகளில் கருப்புக்  கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.சி.சோமையா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி விவசாயத் தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் எஸ்.சங்கர் உள்ளிட்டோர் பேசினர்.
பொன்னமராவதி
பொன்னமராவதியில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என்.பக்ருதீன் தனது வீட்டில் கருப்புக்கொடி ஏற்றினார். உடையாம்பட்டியில் தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பி.ராமசாமியும், காரையூரில் விவசாய சங்க ஒன்றியத் தலைவர் ஏ.செளந்த்தரராஜனும் வீடுகளில் கருப்பு கொடியேற்றினர்.
அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் சுப்பிரமணியபுரம் பேருந்து நிலையம் அருகே விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர்கள் தண்டாயுதபாணி, தர்மராஜ் தலைமை வகித்தனர்.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் திமுக மாநில விவசாய அணி செயலாளர் ஏ.கே. எஸ்.விஜயன், சிபிஐ தேசியக்குழு உறுப்பினர் கோ.பழனிச்சாமி, சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் எஸ்.சாமிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மன்னார்குடி 
மன்னார்குடி பெரியார் சிலை எதிரில் விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் ஜி.மாரிமுத்து, வி.கலியபெருமாள் அசோக்குமார், சரவணன் தலைமை வகித்தனர். 
தரங்கம்பாடி
இலுப்பூர் - சங்கரன்பந்தலில் தமிழ்நாடு விவசாயிகள்  சங்கத்தின் வட்ட செயலாளர் டி.இராசையன் தலைமையி லும், செம்பனார்கோவில் பரசலூர் கடைவீதியில் விவசா யிகள் சங்க வட்டத்தலைவர் என்.சந்திரமோகன் தலைமையி லும், திருக்கடையூர் கடைவீதியில் சிபிஎம் மாவட்டக்குழு உறு ப்பினர் டி.சிம்சன் தலைமையிலும், பொறையார் பழைய பேருந்து நிலையம் அருகே சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பி னர் ஏ.ரவிச்சந்திரன் தலைமையிலும் நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செய லாளர் கே.மகாராஜன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல், ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் எம்.வெ ங்கடாச்சலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.