கும்பகோணம், ஜூன் 3- கும்பகோணம் அடுத்த திருநறையூர் கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் குவைத் நாட்டில் உயிரிழந்துவிட்டார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கள் கோரிக்கை விடுத்துள்ள னர். கும்பகோணம் தாலுக் கா திருநறையூர்கிராமம் வட கட்டளை தெரு வை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் மகேந்தி ரன் கடந்த 15 ஆண்டுக ளாக குவைத் நாட்டில் ஓட்டு நராக பணிபுரிந்து வந்தார் இவர் கடந்த ஓராண்டு க்கு முன்பு சொந்த ஊர் வந்து விட்டு மீண்டும் குவைத்தில் பணி செய்ய சென்றார். இந்நிலையில் மே மாதம் ஒன்றாம் தேதி உடல்நிலை சரியில்லாமல் அங்குள்ள மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் திங்களன்று அவர் உயிரிழந்துவிட்டதாக பெற்றோருக்கு தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்து வர மத்திய மாநில அரசுகள் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ள னர் இறந்துபோன மகேந்திர னுக்கு சற்குணம் என்ற மனைவியும் ஒரு வயதில் மகனும் உள்ளனர்.