tamilnadu

img

வரதட்சணைக் கொடுமை: தந்தை-மகள் தற்கொலை

கடலூர்,பிப்.12- கடலூரை அடுத்த கண்ணாரபேட்டை பகுதியை சேர்ந்தவர்  பாவாடைசாமி (58), பாத்திரம் தயாரிக்கும் தொழிலாளி. இவ ரது மகள் சங்கீதா (28). இவருக்கும் புதுவை பகுதியை சேர்ந்த  ராஜேஷ் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திரு மணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களில் ராஜேஷ்,  அவரது மனைவி சங்கீதாவிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டுள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த பிரச்சனை காரணமாக சங்கீதா அவரது கணவரை விட்டு பிரிந்து தந்தை வீட்டிற்கு வந்துவிட்டார். இதைத் தொடர்ந்து கணவன்-மனைவி 2 பேரும் விவாகரத்து கேட்டு  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கு நிலுவை யில் உள்ளது.

இந்த நிலையில் ராஜேசுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திரு மணம் செய்வதற்கு அவரது உறவினர்கள் ஏற்பாடு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் சங்கீதாவின் குடும்பத்  தினருக்கு தெரிய வந்தது. இந்த நிலையில் வீட்டில் இருந்த  பாவாடைசாமி மற்றும் அவரது மகள் சங்கீதா ஆகிய 2 பேரும்  புதனன்று(பிப்.12) விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். அவர்  களை பாவாடைசாமியின் மகன்கள் மீட்டு சிகிச்சைக்காக கண்ணாரம் பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத் துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கட லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு  அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும்  ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  இதுகுறித்து கடலூர் முதுநகர் காவல்நிலையத்தில் புகார்  செய்யப்பட்டது. அதன்பேரில் பாவாடைசாமியும், சங்கீதா வும் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து  கொண்டனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது  குறித்து தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.

;