தஞ்சாவூர், ஜூலை 14- தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம், கோவிலூர் கிராமத்தில், தமிழக விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள, அவசரச் சட்ட ங்கள் மற்றும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் வகையிலான வரைவு மின்சார சட்ட த்தையும் ரத்து செய்யக் கோரி, தமிழகம் முழு வதும் நடைபெறும் விவசாயிகளிடம் ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கத்தின் ஒரு பகுதியாக தஞ்சையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் கே. முனியாண்டி, சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஏ.நம்பிராஜன், விவசாய சங்கத் தலைவர் பி.தங்கமணி உள்ளிட்டோர் ஏராளமான கை யெழுத்துக்களை விவசாயிகளிடம் பெற்றனர்.