tamilnadu

img

தஞ்சாவூர் பாபநாசம் அருகே ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வீடு கட்டுவதற்குத் தோண்டிய குழியில் ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், பண்டாரவாடை அருகில் உள்ள கோயில் தேவராயன்பேட்டையில் கிராமத்தில் முகமது பைசல் (43) என்பவருக்குச் சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில் புதிதாக வீடு கட்டுவதற்காக கட்டிட பணியாளர்கள் அஸ்திவாரம் தோண்டினர்.

அப்போது, சுமார் 10 அடிக்கு மேல் தோண்டப்பட்ட குழியில் இருந்து ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் பரபரப்படைந்த கட்டிடப் பணியாளர்கள் இடத்தின் உரிமையாளர் முகமது பைசலிடம் தெரிவித்தனர். அவர் உடனடியாக பாபநாசம் வட்டாட்சியர் தகவல் அளித்துள்ளார்.

தகவலின் பேரில் அங்கு வந்த வட்டாட்சியர்  அங்கு  சோமஸ்கந்தர்,  சந்திரசேகரர்,  திருஞானசம்பந்தர்  உள்ளிட்ட சிலைகளையும் கண்டெடுத்தனர். மேலும் இதுகுறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தால் தான் சிலைகள் குறித்த முழு விவரமும் தெரியும் என aஅதிகாரிகள் தெரிவித்தனர்.