தஞ்சாவூர். டிச.8- தஞ்சாவூர் அருகே நாஞ்சி கோட்டை ஊராட்சியில் ஆர்.எம்.எஸ். காலனி அமைந்துள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பொதுமக்க ளின் குடிநீர் வசதிக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 15,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட் டது. அந்தத் தொட்டியில் குடிநீர் நிரப்பி அப்பகுதி மக்களுக்கு குடி நீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி யில் கசிவு ஏற்பட்டது. மேலும் சிதல மடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய நிலையில் காணப்பட்டது. இதையடுத்து அருகே வேறொரு மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து அதன் மூலம் தற்போது பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே இருந்த பழைய மேல் நிலை நீர்தேக்கதொட்டி இடிந்து விழக் கூடிய நிலையில் இருந்ததால், அந்த வழியாக நடந்து செல்லவே பொதுமக்கள் அச்சப்பட்ட னர். குழந்தைகளை அந்த பகுதியில் விளையாட அனுமதிக்க வில்லை. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் தொட்டி இடிந்து விழுந்து ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று விடுமோ என பொது மக்கள் அச்சம் அடைந்தனர். உடனடி யாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி யை பாதுகாப்பான முறையில் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நாஞ்சிகோட்டை ஊராட்சி நிர்வாகத்தின் பரிந்துரையின் பேரில், தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் உத்தரவின்படி பொக் லைன் இயந்திரம் மூலம் பாதுகாப்பான முறையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடித்து அகற்றப்பட்டது.