tamilnadu

img

மருத்துவப்படி தொடர்ந்து வழங்கக் கோரி பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் போராட்டம் 

 கும்பகோணம்: பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மருத்துவ பில் மற்றும் மருத்துவப் படி அவற்றை தொடர்ந்து வழங்கிட வலியுறுத்தியும் அதற்குத் தேவையான நிதியை கால தாமதமின்றி மத்திய அரசும் பிஎஸ்என்எல் நிர்வாகமும் உடனே வழங்கிட வலியுறுத்தி அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கம் சார்பில் கும்பகோணம் டாக்டர் பேஷண்ட் ரோட்டில் உள்ள தொலைபேசி இணைப்பகம் தலைமை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் மதியழகன் தலைமை ஏற்றார். மாவட்ட செயலாளர் ஆர்.ஏ.பக்கிரி நாதன் வரவேற்றார். பிஎஸ்என்எல் மாவட்ட செயலாளர் டி.மதியழகன் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் கிளை செயலாளர் பூபதி பிஎஸ்என்எல் குருசாமி பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நித்தியானந்தம் அனைத்து துறை அரசு ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜகோபாலன் வட்ட செயலாளர் அன்புமணி வட்ட தலைவர் துரைராஜ் பக்கிரிசாமி ராமமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு போராட்டம் செய்தனர். மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.