கும்பகோணம், செப்.3- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகராட்சியில் தூய்மை பணியில் முதல் இடமாக இருந்து வருகிறது. அதற்கு காரணமான துப்புரவு தொழிலாளர்களின் பணி கள் பாராட்டுவதாக இருந்து வருகிறது. நகராட்சியில் நிரந்தர பணியாளர்களை தவிர 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் மீனாட்சி மிஷன் சர்வீஸ் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த கூலி அடிப்படையில் துப்புரவு பணிகளை ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தற்போது நாளொன்றுக்கு 245 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. தற்போது எவ்விதப் ஊதிய உயர்வும் வழங்கப்படாமல் உள்ளதல் உடனே ஊதிய உயர்வு வழங்க வேண்டும். துப்புரவு பணியாளர்களி டம் ஏதோ காரணம் காட்டி இன்சூரன்ஸ் திட்டத்தை முடுக்கா மல் எல்லோருக்கும் முழுமையாக இன்சூரன்ஸ் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பி.ஜே.ஜேசுதாஸ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் இமானுவேல், சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.ராஜன், கலியமூர்த்தி, எம்எம்எஸ், உள்ளாட்சி ஊழியர் சங்க தலைவர் ஜெய ராமன், செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் மாரியப்பன், துணை செயலாளர் எஸ்.வெங்கடேசன், அருமை துரை, எஸ்.வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட பொருளாளர் ம.கண்ணன் விளக்க உரை ஆற்றினார். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஆர்சேகர் ஆட்டோ ஊழியர் சங்க நகர தலைவர் தாடி.சுவாமிநாதன் சங்க பொறுப்பாளர்கள் ராமச்சந்திரன், சங்கர், தணிகாசலம், திருவருட்செல்வன், சதாசிவம், பழனியம்மாள், ஆனந்தி, முத்தமிழ் செல்வி, செல்லத்தாய் வசந்தா, பிரேமா, காந்தாரி, பாரதி, உள்ளிட்ட ஏராளமான துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.