tamilnadu

img

சிபிஎம் முதுபெரும் தலைவர் நடராஜன் முதலாமாண்டு நினைவு அஞ்சலி

கும்பகோணம், பிப்.12- தஞ்சை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்க ளில் ஒருவரும் கும்பகோ ணம் பகுதியில் தொழிலா ளர்களை ஒருங்கிணைத்து சிஐடியு சங்கத்தைப் ஒளி பெறச் செய்தவருமான வி.நட ராஜனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி, பேரணி, தெருமுனை கூட்டம் உள்ளி ட்ட நிகழ்வுகள் கும்பகோ ணத்தில் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு சிஐடியு மாவ ட்டப் பொருளாளர் கண்ணன் தலைமை வகித்தார். மாவ ட்ட துணைத் தலைவர் பி.ஜேசுதாஸ், கவுரவத் தலைவர் செந்தில்குமார், சாலை போக்குவரத்து மாநிலக்குழு பார்த்தசாரதி, மாவட்ட துணைச் செயலா ளர் கமலம் ஆகியோர் முன்னி லை வகித்தனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலாளர் சின்னை.பாண்டி யன், சிஐடியு மாவட்டச் செய லாளர் ஜெயபால், தமுஎகச மாவட்டத்தலைவர் ஜீவபா ரதி, விதொச மாநிலக் குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட துணைத்தலைவர் நாகேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் கோ. மணிமாறன், மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.சேகர் மற்றும் மாதர் சங்க உறுப்பினர்கள் பங்கேற்ற பேரணி, கும்பகோணம் காந்தி பூங்காவில் இருந்து புறப்பட்டு மீன் மார்க்கெட்டில் தெருமுனை கூட்டம் நடந்தது. முன்னதாக காலை 10 மணிக்கு கும்ப கோணம் பழைய மீன் மார்க்கெட் அருகில் தோழர் வி.நடராஜன் படத்திற்கு புக ழஞ்சலி நிகழ்ச்சி நடை பெற்றது. தொடர்ந்து கும்ப கோணம் மைதீன் புகை யிலை ஏ.ஆர்.ஆர்.சீவல் தொழிலாளர்கள் சார்பில் சிஐடியு கொடியை ஏற்றி  புகழ் அஞ்சலி செலுத்தினார்.

;