கும்பகோணம், செப்.24- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் பயின்ற மாணவிக்கு மன உளைச்சலை ஏற் படுத்தி தற்கொலைக்கு தூண்டிய பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை கல்லூரி கல்வி இயக்குனரிடம் மாணவர்கள் புகார் அளித்தனர். அதனால் கல்லூரிப் பேரா சிரியர்கள் எம்பில் மாணவர்களுக்கு கல்வி வழங்க மறுத்து புறக்கணிப்ப தாக எடுத்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என மாணவர் சங்கங்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள், அரசி யல் அமைப்பினர் கோரிக்கை விடுத் துள்ளனர். தஞ்சை மாவட்டம் கும்ப கோணத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் பயின்று வரும் எம்பில் ஆய்வியல் நிறைஞர் மாண வர்களின் ஆய்வுகளை அவர்களின் நெறியாளர்கள் முடித்து தர மறுத்த தால் கடந்த மாதம் ஆகஸ்ட் 28 ஆம் தேதி விலங்கியல் துறையின் ஆய்வில் நிறைஞர் பயின்ற மாணவி கௌசல்யா என்பவருக்கு அவரது நெறியாளரான பேராசிரியர் ரவிச்சந்திரன் மன உளைச்சலை ஏற்படுத்தி தற்கொலை முயற்சி செய்து அந்த மாணவி மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிகழ்வானது அனைத்து ஊடக மற்றும் நாளிதழ்களிலும் வெளி வந்துள்ளது. இது தொடர்பாக, கல்லூரி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கல்லூரி நிர்வாகம் கல்லூரிக்கு விடுமுறை அறிவித்தது. எனவே மாணவி கௌசல்யாவின் தற்கொலை முயற்சிக்கு காரணமான பேராசிரியர் ரவிச்சந்திரன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து மாண வர்களின் நலன் கருதி மாணவர்களை யும் கல்லூரியையும் பாதுகாக்குமாறு பல்வேறு தரப்பினராலும் சென்னை கல்லூரி கல்வி இயக்குனர், ஆதிதிரா விடர் நலத்துறை மாவட்ட அதிகாரி, கல்லூரி ஆட்சி மன்ற குழு ஆகியோரி டம் துறைரீதியான நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடப்பட்டது. இந்நிலையில் வரும் 30 ஆம் தேதிக் குள் எம்பில் மாணவர்களுக்கு நெறியா ளர்கள் தேர்வு செய்ய வேண்டும். இந்த நேரத்தில் கும்பகோணம் கல்லூரியில் பணியாற்றி வரும் பேராசிரியர்கள் சங்க கூட்டத்தில் 59 பேராசிரியர்கள் கொண்ட ஒரு பிரிவினர் மட்டும் எம்பில் படிக்கும் மாணவர்களுக்கு நெறியாளராக பணியாற்ற மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கல்லூரியில் முதல் வரிடம் கையொப்பமிட்டு கொடுத் துள்ளனர். கல்வியை கொடுக்கும் கல்லூரி பேராசிரியர்கள் எம்பில் மாணவர்கள் சேர்க்கை முடிந்த நிலையில் இப்படிப் பட்ட எம்பில் படிக்கும் மாணவர்களை புறக்கணிக்கும் சில பேராசிரியர்களின் முடிவை மாணவர் சங்கத்தினர் மற் றும் முன்னாள் மாணவர்கள், பெற்றோர் கள், சிபிஎம், விசிக உள்ளிட்ட அரசியல் அமைப்புகள் திரும்பப் பெற வேண்டும் எனவும் இந்நிலை நீடித்தால் எம்பில் படிப்பு மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் எனவும், தெரி வித்து கல்லூரி முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தனர். அதற்கு முதல் வர் சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் முடிவை கல்லூரி கல்வி இயக்குன ருக்கு சுற்றறிக்கை அனுப்புவதாக தெரி வித்தார். இருப்பினும் எம்பில் நெறியா ளர்கள் இப்படிப்பட்ட விரும்பத்தகாத முடிவை பரிசீலனை செய்து தமிழக அரசும் கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்து வருகிறது.