tamilnadu

img

மோடி அரசுக்கு எதிராக சிபிஎம் பிரச்சாரம்....

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஒன்றிய அரசு தேசிய பணமாக்கல் திட்டம் என்ற பெயரில் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களையும், வளங்களையும் சூறையாடுவதை எதிர்த்தும்; மதவெறி அரசியலை கூர்மைப்படுத்தியுள்ள பாஜக ஆட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியும் தமிழகம் முழுவதும்  “மக்கள் விசாரணை மன்றம்” எனும் இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிறது. இதை மக்களிடையே பிரச்சாரம் செய்யும் விதத்தில் கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. இவ்வியக்கத்தை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி துவக்கி வைத்தார்.

;