tamilnadu

img

தீ விபத்தில் குடிசை வீடு நாசம்

தஞ்சாவூர், ஜூன் 2- தஞ்சாவூர் மாவட்டம் அம்மையாண்டி கிரா மத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம சற்குணம், இவரது மனைவி விஜயலட்சுமி. இருவரும் விவசாயக் கூலித் தொழி லாளர்கள்.  இந்நிலையில் ஞாயிற் றுக்கிழமை மாலை வீடு திடீரென தீப்பற்றி எரிந்ததில் அனைத்துப் பொருட்களும் கருகி நாசமானது. திங்கள் அன்று பேராவூரணி வட்டாட் சியர் க.ஜெயலெட்சுமி, ரூ. 5000 மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார். ஒன்றிய தலைவர் சசிகலா ரவிசங்கர் தனது சொந்தப் பணத்தில் இருந்து நிதி யுதவி வழங்கினார். ஊராட்சி தலைவர் மல்லிகை வை. முத்துராமலிங்கம், துணைத் தலைவர் ராணி குருசாமி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் உடனிருந்த னர்.

;