tamilnadu

img

கொரோனோ விழிப்புணர்வு

அவிநாசி, மார்ச் 16- அவிநாசி பேருராட்சி பகுதியில் கொரோனோ விழிப்பு ணர்வு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. மேலும் பொது இடங்களில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது. இந்த நிலையில் அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், கிளைச் சிறை, கோவில், மசூதி, பள்ளிகள் ஆகிய இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கொரோனோ விழிப்புணர்வு போஸ்டர் ஒட்டப்பட்டது. இந்நிகழ்வில் செயல் அலுவலர் ஈஸ்வரமூர்த்தி, வட்டாட்சியர் சாந்தி, மருத்துவ அலுவலர் ரமணன், சுகாதார ஆய்வாளர்,  பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.