கும்பகோணம், ஜூலை 16- கும்பகோணம் பகுதியில் நோய்தொற்று வேகமாக பரவுவதால் ஜூலை 19 முதல் ஒரு வா ரத்திற்கு தளர்வில்லா முழு ஊரடங்கை அம ல்படுத்த வணிகர்கள் முடிவு எடுத்துள்ளனர். கும்பகோணம் நகரம் மற்றும் ஊரக பகுதியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிமாநி லங்கள் மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர் திரும்புவோர், உறவினர் வருகை, மார்க்கெட் சென்று வருபவர் மூலம் தொற்று அதிகரிப்ப தாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அதிகரிக்காமல் தடுக்கும் வகை யில் ஆட்சியர் கோவிந்தராவ் உத்தரவுபடி, நக ராட்சி அலுவலகத்தில் ஆணையர் லட்சுமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அனைத்து வணிகர்கள் கலந்து கொண்டனர். இதன்படி, தளர்வில்லா ஊர டங்கு ஜூலை 19 முதல் ஒரு வார காலத்திற்கு மட்டும் அமல்படுத்த உள்ளதாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.