தஞ்சாவூர், ஜூலை 8- தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோ ய்தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 504 பேர், மருத்துவமனையில் 172 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவ ட்டத்தில் இதுவரை 50,575 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யயப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை பகுதியில் குடியிருந்து வரும் 36 வயதான ஆண் நபர், வல்லம் ஆரம்ப சுகா தார நிலையத்தில் செவிலியராக பணிபு ரிந்து வருகிறார். கடந்த மூன்று வாரங்களாக, ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நோய்த் தொற்று கட்டுப்பாட்டு அறையில் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இங்கு பணியாற்றும் அனைவருக்கும் இரண்டு தினங்களுக்கு முன் கொரோனா பரி சோதனை செய்யப்பட்டதில், செவ்வாய்க்கி ழமை வந்த பரிசோதனை முடிவில், இவருக்கு மட்டும் நோய்த்தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து நோய்த்தொற்று கட்டு ப்பாட்டு அறை மூடப்பட்டு, அது ஆட்சியர் அலு வலகக் கட்டடத்தில் குறைதீர் அரங்கில் தற்கா லிகமாக செயல்பட்டு வருகிறது. இதே போல ராசாமிராசுதார் அரசு மரு த்துவனையில், மாத்திரை வழங்கும் பணியில் இருந்த பெண் ஊழியர் ஒருவ ருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்ப ட்டது. இதையடுத்து மாத்திரை வழங்கும் இடம் தற்காலிகமாக மூடப்பட்டு, வேறு இட த்தில் செயல்படுகிறது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட இருவரும் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.