தஞ்சாவூர், மார்ச் 21- தஞ்சாவூர் சுகாதாரத் துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் கை சுத்தி கரிப்பான் தயாரிக்கும் பணி நடைபெறுவதை ஆட்சியர் பார் வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாவட்டத்திற் குள் நுழையும் எட்டு இடங்க ளில் சோதனை முகாம்கள் அமைக்கப்பட்டு, கொரோ னா நோய்த்தொற்று கண்கா ணிப்பு பணி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம், நாளொன்றுக்கு 15,000 முகக் கவசங்கள் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. பொது மக்கள் மிகவும் அத்தியா வசிய தேவை இருந்தால் மட்டுமே வெளியில் செல்ல வேண்டும். பொதுமக்களு க்கு தேவையான அத்தியா வசிய பொருட்கள் தடை யின்றி கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார் பில் அனைத்து நடவடிக்கை களும் எடுக்கப்பட்டு வருவ தாக ஆட்சியர் தெரிவித்தார்