தஞ்சாவூர், பிப்.16- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூ ரணியை அடுத்த ஆவணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், இந்திய அரசியல மைப்புச் சட்ட பாதுகாப்பு பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் அதிரை ராஜிக் தலைமை வகித்தார். செய லாளர் வல்லம் பாட்சா, பொருளா ளர் அஷ்ரப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலாளர் நெல்லை பைசல், “இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம்” என்ற தலைப்பி லும், மாநிலப் பேச்சாளர் ஜமால் உஸ்மானி, “இந்தியா எங்கள் தேசம், இஸ்லாம் எங்கள் சுவா சம்” என்ற தலைப்பிலும், ஆவ ணம் ரியாஸ் “மாமனிதரின் மகத் தான ஆட்சி” என்ற தலைப்பிலும் உரையாற்றினர். கூட்டத்தில், “இந்திய அரசி யலமைப்புச் சட்டத்திற்கு எதிராக, மக்களை மதரீதியாக பிளவு படுத்தும் என்.ஆர்.சி, என்.பி.ஆர், சி.ஏ.ஏ, ஆகிய கருப்புச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். இவ ற்றை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என தமிழக அரசு, சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறை வேற்ற வேண்டும். வண்ணாரப் பேட்டையில் பொதுமக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை யைக் கண்டித்தும், தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.