தஞ்சாவூர், நவ.2- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த பொதுவுடமை இயக்கத் தோழர் வி.கோபால்(வயது 75) உடல் நலக்குறைவால் வெள்ளிக்கிழமை அன்று காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளராகப் பணியாற்றி, பின்னர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் நகரச் செயலாளர், ஒன்றிய நிர்வாகக் குழு, குடி யிருப்போர் பாதுகாப்பு சங்கத் தலைவர் என பல பொறுப்புகளை வகித்தவர். இவருக்கு ராஜம் என்ற மனை வியும், வாழசுப்பிரமணியன், வடிவேலு என்ற மகன்க ளும், வாழசுந்தரம் என்ற மக ளும் உள்ளனர். அன்னா ரது இறுதி நிகழ்ச்சிகள் சனிக்கிழமை மாலை பேராவூரணி செங்கொல்லை யில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டக்குழு உறுப்பினர் வீ.கருப்பையா, ஒன்றியச் செயலாளர்கள் பேராவூரணி ஏ.வி.குமார சாமி, சேதுபாவாசத்திரம் ஆர்.எஸ்.வேலுச்சாமி, கே.சி. ஆவான், பூவாளூர் மாணிக் கம், ரெங்கசாமி, ராமலிங் கம், ராஜா முகமது, இந்தி யக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பா.பாலசுந்தரம், மாவட்ட துணைச் செயலாளர்கள் காசிநாதன், முத்து உத்தி ராபதி, ஒன்றியச் செயலா ளர்கள் பட்டுக்கோட்டை ஏ.எம்.மார்க்ஸ், பேராவூரணி பன்னீர்செல்வம், சேதுபாவா சத்திரம் சின்னத்தம்பி, நகரச் செயலாளர் சித்திரவேல், பாரதி வை நடராஜன், ராஜ மாணிக்கம், நகர வர்த்தகர் கழகம் சார்பில் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், பொரு ளாளர் எஸ்.ஜகுபர்அலி, கதிர்காமம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.