கும்பகோணம், ஜூன் 1- தஞ்சை மாவட்டம் திரு விடைமருதூர் வட்டத்தில் வசிக்கும் கிராமப் பகுதி சாதாரண ஏழை மக்கள் மக ளிர் சுய உதவி குழுக்கள் மூலம் நுண் நிதி நிறுவனங் கள் மூலமாகவும் கடன் பெற்று முறையாக செலுத்தி வந்தனர். தற்போது ஊரடங்கால் வேலை ஏதுமின்றி வருமா னம் இல்லாமல் மிகவும் சிர மப்பட்டு வருகின்றனர். மத்திய மாநில அரசுகளும் ரிசர்வ் வங்கியும் கடன் தொகையை கட்டுவதற்கான கால அவகாசத்தை ஆகஸ்ட் 31 வரை நீடித்து உள்ளன. இந்நிலையில் எக்விடாஸ், கிராம விடியல், புது ஆறு போன்ற நிதி நிறுவனங்கள் கடன் தொகையை செலுத்த பெண்களை நிர்பந்திக் கின்றன. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உட்பட்டு பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே மத்திய மாநில அரசுகள் தலையிட்டு அரசு உத்தரவுப்படி கடன் தொகை வசூலிப்பதை ஒத்தி வைக்கும்படி உத்தரவிட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவிடைமரு தூர் வடக்கு ஒன்றியம் மாதர் சங்கம் சார்பில் திருவிடை மருதூர் வட்டாட்சியர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மாவட்ட அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட குழு உறுப்பி னர் அறிவு ராணி தலைமை வகித்தார். வடக்கு ஒன்றிய மாதர் சங்க பொறுப்பாளர் கள் கலைச்செல்வி, மஞ்சு பார்கவி, அஞ்சலி, சித்ரா, அந் தோணியம்மாள் உள்ளிட்ட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.