மன்னார்குடி, நவ.21- மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளை கண்டித்து மன்னார்குடியில் ஐந்து இடங்களில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி.ரெகுபதி பிரச்சார இயக்கங்களுக்கு தலைமை வகித்தார். மன்னார்குடி கீழப்பாலம், நகராட்சி, தங்கமணி கட்டிடம், பந்த லடி, பேருந்து நிலையம் அருகே பெரி யார் சிலை ஆகிய ஐந்து இடங்களில் நடைபெற்றது. பிரச்சாரத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் இரா. மாலதி, மாவட்டச் செயலாளர் டி. முருகை யன், உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே. முனி யாண்டி, மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பி.டி.லோகநாயகி மற்றும் பல்வேறு சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண் டாவது நாளாக புதன்கிழமை அன்று ஒரத்தநாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு தொடங்கிய பிரச்சாரத்திற்கு பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். அரசு போக்கு வரத்துக் கழக தொழிற் சங்க பொதுச் செயலாளர் ஜி. மணிமாறன் துவக்கி வைத்தார். சிபிஎம் ஒன்றியச் செயலா ளர்கள் ஒரத்தநாடு என்.சுரேஷ்குமார், மதுக்கூர் வை.சிதம்பரம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.காசிநாதன், எஸ்.கோவிந்தராசு, மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கலைச் செல்வி ஆகியோர் பேசினர். பாப்பாநாடு, வடசேரி, மதுக்கூர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் நடை பெற்றது. ஊரணிபுரத்தில் நடைபெற்ற பிரசார இயக்கத்திற்கு டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.வீரய்யன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. ஜெயபால் தொடங்கி வைத்தார். அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர். வாசு, சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பி னர் கே. ராமசாமி, ஒன்றிய செயலாளர் கள் திருவோணம் பி.கோவிந்தராசு, பேராவூரணி ஏ.வி.குமாரசாமி ஆகியோர் பேசினர். டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜெ.ரமேஷ், பொருளாளர் கே.மதியழகன், உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். நெய்வேலி, திருச்சிற்றம்பலம், உதய சூரியபுரம் ஆகிய இடங்களில் பிரச்சா ரம் நடைபெற்றது.
பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை மின்வாரிய அலுவலகம் அருகே துவங்கிய பிரச்சார இயக்கத்திற்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ராஜாராமன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோ விந்தராஜ் தொடங்கி வைத்தார். மாதர் சங்க மாவட்டச் செயலா ளர் எஸ்.தமிழ்ச்செல்வி, சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் எம். செல்வம், பட்டுக்கோட்டை ஒன்றி யச் செயலாளர் எஸ்.கந்தசாமி ஆகி யோர் பேசினர். பட்டுக்கோட்டை நகரம் முழுவதும் பிரச்சாரம் நடை பெற்றது.
சேதுபாவாசத்திரம்
சேதுபாவாசத்திரத்தில் நடை பெற்ற பிரச்சார இயக்கத்திற்கு எஸ். சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார் தொடங்கி வைத்தார். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் ஆர்.சி. பழனிவேலு, மாவட்டக் குழு உறுப்பினர் வீ.கருப்பையா, ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி ஆகியோர் பேசினர். மல்லிப்பட்டினம், அதிராம்பட்டி னம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் நடைபெற்றது. தொடர்ந்து நான்கு குழுக்களும் இணைந்து புதன்கிழ மை மாலை பட்டுக்கோட்டை அரசு போக்குவரத்து கழக அலுவல கத்தில் இருந்து புறப்பட்டு பேருந்து நிலையம் வழியாக மணிக்கூண்டு சென்றடைந்தது. அங்கு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
அரியலூர்
.அரியலூர் கடைவீதியில் தெரு முனைப் பிரச்சாரம் சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.துரைசாமி தலைமை யில் செவ்வாய் அன்று நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் ஆர்.சிற்றம் பலம், மாவட்டத் தலைவர் எஸ்.என். துரைராஜ், மாவட்ட குழு உறுப்பி னர்கள் கிருஷ்ணன், மெய்யப்பன், செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அரியலூர் ஒன்றிய செய லாளர் துரை அருணன் உள்பட பலர் கலந்து கொண்டு அரியலூர் நகர் முழுவதும் பிரச்சாரம் செய்தனர்
மணப்பாறை
மணப்பாறை பேருந்து நிலை யம் மற்றும் காமராஜர் சிலை அரு கில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஷாஜகான் தலைமை வகித்தார். பிரச்சாரத்தில் சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ், பொருளாளர் சம்பத், மாவட்ட குழு உறுப்பினர் என். அழகர்சாமி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ராஜ கோபால், பாலு ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மற்றும் பல்வேறு சங்கங்க ளின் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.