கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருமங்கலக்குடியில் ஆட்டோ ஓட்டுனர்கள், உரிமையாளர் சங்கம் சிஐடியு புதிய கிளை துவக்க விழா நடைபெற்றது. மாவட்ட சிஐடியு துணைத் தலைவர் சா. ஜீவபாரதி பி.ஜே.சுதாஸ், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் பக்கிரிசாமி, கும்பகோணம் நகர ஆட்டோ சங்கர் கௌரவத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சங்க கௌரவத் தலைவராக ஜீவபாரதி, தலைவராக புரோஸ்கான் துணைத்தலைவர் ஹாஜாமைதீன், செயலாளராக அல்லா பாக்ஸ், துணை செயலாளராக முஹம்மது தவ்ஃபீக் பொருளாளராக அஸ்கர்தீன் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.