தஞ்சாவூர், ஜூலை 18- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி ஆத்தாளுர் வீரமாகாளி யம்மன் கோயிலில் மது எடுத்தல் மற்றும் தேரோட்ட விழா புதன்கிழமை நடைபெற்றது. 9-ம் நாள் நிகழ்ச்சியான இவ்விழாவில் களத்தூர், தென்னங்குடி, முடப்புளிக்காடு, கழனிவாசல் கிராமங்களை சேர்ந்த மக்கள் மது எடுத்து வந்து தேரில் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து தேர், கோயில் தேரோட்ட வீதியை வலம் வந்தது. நிகழ்ச்சியில் முத்திரைத்தாள் கட்டணம் தனித் துணை ஆட்சியர் அ.கமலக்கண்ணன், வட்டாட்சியர் க.ஜெயலட்சுமி, பேரூராட்சி செயல் அலு வலர் மணிமொழியன், காஞ்சிபுரம் ஸ்ரீசங்கரமடம் மாவடுகுறிச்சி கிளை மேலாளர் ஜி.ஆர்.ஸ்ரீதர், கோயில் செயல் அலுவலர் அமரநாதன், பேரூ ராட்சி தலைமை எழுத்தர் சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி வட்டார மருத்துவ அலுவலர் வி.சௌந்தர்ராஜன் தலைமையில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.