தஞ்சாவூர், ஜூலை 16- தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி பகுதி இளைஞர்கள் முயற்சி யால், தூர்வாரப்படும் பெரிய குளத்தை மத்திய குழுவினர் திங் கள்கிழமை ஆய்வுசெய்தனர். 564 ஏக்கர் பரப்பளவு கொண்ட பேராவூரணி பெரியகுளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாகவும், விவசாய பயன் பாட்டிற்கும் உதவிய பெரியகுளத் தின் வரத்து வாரிகள் அடைபட்ட நிலையில் தண்ணீர் இன்றி வறண்ட நிலையில் இருந்ததை கண்ட இப் பகுதி இளைஞர்கள், விவசாயிகள் ஒன்றிணைந்து கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங் கம் என்ற அமைப்பைத் தொடங்கி கடந்த 23 நாட்களாக பெரிய குளத்தை தூர்வாரும் பணியில் ஈடு பட்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் குடி மராமத்து பணிகள் குறித்தும் நீரா தாரங்களை மேம்படுத்துவது குறித் தும் ஆய்வு செய்யும் மத்திய குழுவை சேர்ந்த புவியியல் ஆய்வா ளர் ராஜீவ் சக்சேனா, மத்திய மாற்றுத்திறனாளிகள் இயக்குநர் ஜிஜித் மோகன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பெரியகுளத்தை தூர்வா ரும் இளைஞர்களுக்கு பாராட்டு களை தெரிவித்தனர். அப்போது கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்க நிர்வாகிகள், ‘பொதுமக்களிடம் நன்கொடை வசூலித்து இந்த பெரியகுளத்தை தூர்வாரி வரு கின்றோம். எங்களுக்கு நிதி ஆதா ரம் பற்றாக்குறையாக உள்ளது. இதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும்’ என வலியுறுத்தினர். அதற்கு மத்திய நீர் மேலாண்மை இயக்கத்தின் தலைவர் பிரமோத் பதக்கை சந்தித்து உங்களின் நிதி தேவை குறித்து கூறினால், மத்திய அரசிடமிருந்து நிதி பெற்று தர நட வடிக்கை எடுப்பார் எனவும், நிதியை பெற்று மழைக்காலத்திற்குள் தூர் வாரும் பணியினை விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொண்டனர். ஆய்வின் போது பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர் சடை யப்பன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பிர சன்னா, அன்பரசன் மற்றும் பேரா வூரணி வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.பி. ராஜேந்திரன், கடைமடை ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்க ஆலோசகர் இ.வீ.காந்தி மற்றும் தங்க.கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.