தஞ்சாவூர், ஆக.8- வேலை நாட்களில் மதியத்திற்கு பிறகு செயல்படாத, பேராவூரணி கிளை தஞ்சாவூர் மத்தியக் கூட்டுறவு வங்கி செயல்பாடுகளால் வாடிக்கையா ளர்கள் அவதிப்படுகின்றனர். தஞ்சாவூர் மத்தியக் கூட்டுறவு வங்கி கிளை பேராவூரணி மெயின் ரோட்டில் இயங்கி வருகிறது. மேலா ளர் மற்றும் கணக்காளர் உள்ளிட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்ற னர். இந்நிலையில் ஆக.8 (வியா ழக்கிழமை) அன்று மதியம் சுமார் 1.30 மணியளவில், வங்கியின் மெயின் கேட் ஷட்டர் பாதி அளவு மூடப்பட்டது. இதையடுத்து உணவு இடைவேளைக் காக மூடப்பட்டதாக நினைத்து வாச லிலேயே வாடிக்கையாளர்கள் காத்து நின்றனர். ஆனால் 3 மணி வரையிலும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து வாடிக்கையாளர்கள் குரல் எழுப்பிய போது, வேலை நேரம் முடிந்து விட்டது. நாளை காலை வாருங்கள் எனக் கூறி யுள்ளனர். இதையடுத்து காத்திருந்த சில வாடிக்கையாளர்கள் திரும்பிச் சென்றனர். இந்நிலையில், வங்கிக்கு வேலை யாக வந்த, சேதுபாவாசத்திரம் வட்டா ரம் செம்பியன்மாதேவிபட்டிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசி ரியை திலகவதி கூறுகையில், “வங்கி யில் கடன் பெறுவது தொடர்பாக பள்ளி யில் அனுமதி பெற்று வந்தேன். மதியம் 2 மணி முதல் காத்திருந்த நிலையில் நாளை வருமாறு திருப்பி அனுப்பி விட்டனர். இனி நாளையும் விடுமுறை போட்டு வரவேண்டும். என்ன செய் வது என தெரியவில்லை” என்றார் கலக்கத்துடன். இதையடுத்து சரியாக 3.30 மணிக்கு வங்கியில், அரைகுறையாக மூடப்பட்டிருந்த கதவு வழியாக உள்ளே சென்று தஞ்சாவூர் மத்தியக் கூட்டுறவு வங்கி கிளை மேலாளரிடம் நமது செய்தியாளர் கேட்டபோது, “மின்சாரம் இல்லை. சர்வர் பிரச்சனையாக உள் ளது. வேலை அதிகமாக உள்ளது. நாளை காலை வாருங்கள்” என்றார். பெரும்பாலான நேரங்களில் மதியம் 3 மணிக்குள் வங்கி வேலை நேரம் முடிந்து விட்டது எனக் கூறி வாடிக்கை யாளர்களை திருப்பி அனுப்புவதாகக் கூறப்படுகிறது. எனவே, கூட்டுறவு வங்கி உயர் அலுவலர்கள் இதுகுறித்து விசா ரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்ப தோடு, வாடிக்கையாளர்கள் நலன் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.