தஞ்சாவூர், அக்.17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தஞ்சாவூர் மாவட்டக்குழு அலு வலகத்தில் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் கட்சிக் கொடியேற்றி வைத்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், எம். மாலதி, அருளரசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சரவணன், அரவிந்த சாமி, மாநகரச் செயலாளர் என்.குரு சாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி பி.சத்தியநாதன், மாநகரக் குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடி னர். தஞ்சாவூர் நீதிமன்றச் சாலை, பம்பிங் ஸ்டேசன், கீழவாசல் உள்ளிட்ட 15 இடங்களில் கொடி யேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. பட்டுக்கோட்டை
கட்சி பட்டுக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலை மையில், முதல்சேரி கிளைச் செய லாளர் சாமிநாதன் கட்சிக் கொடி யேற்றி வைத்தார். மெரினா ஆறு முகம், முருக.சரவணன், மோரீஸ் அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை ஒன்றியம் கரம்ப யத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.செல்வம் கொடியேற்றி வைத்தார். கிளைச் செயலாளர் வி.ராமையன், கலந்து கொண்டனர். மதுக்கூர்
மதுக்கூர், ஓலையக்குன்னம், கீழக்குறிச்சி, ஆவிக்கோட்டை, அண்டமி, மூத்தாக்குறிச்சி, வாட்டாகுடி தெற்கு, வடக்கு, அத்தி வெட்டி, சிவிக்காடு ஆகிய இடங்க ளில் கட்சிக் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. ஒன்றியச் செயலா ளர் வை.சிதம்பரம், மாவட்டச் செயற் குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.காசிநாதன், உறுப்பினர்கள் ,கிளைச் செயலாளர்கள், கட்சியினர் கலந்து கொண்டனர். ஒரத்தநாடு, பஞ்சநதிக்கோட்டை, தெற்கு நத்தம், நெய்வாசல், பாப்பா நாடு, ஆம்பலாபட்டு மற்றும் பல்வேறு இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர் என்.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் கோவிந்தராசு, ஒன்றி யக்குழு உறுப்பினர் கலந்து கொண்ட னர்.
திருவையாறு
திருவையாறு ஒன்றியத்தில் செந்தலை, கண்டமங்கலம், வரகூர், மணத்திடல், கருப்பூர், நடுக்காவேரி, திருவையாறு நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்சிக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில் குமார், மாவட்டக்குழு உறுப்பினர் கள் எம்.பழனி அய்யா, ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். கும்பகோணம் ஒன்றியம்
கும்பகோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாபுராஜபுரம், ராஜா நகர், சத்யா காலனி, சாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோ கரன், மாவட்ட குழு உறுப்பினர் சி.நாக ராஜன், ஒன்றிய செயலாளர் பி.ஜேசு தாஸ், ஒன்றிய குழு உறுப்பினர் தட்சிணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்சிராப்பள்ளி
கட்சியின் பொன்மலை பகுதிக் குழு சார்பில் மேல கல்கண்டார் கோட்டை, பொன்மலைப்பட்டி ராஜீவ் காந்தி நகர், மாஜி ராணுவ காலனி, ஆர்மரிகேட், இரஞ்சிதபுரம், சுப்பிர மணியபுரம், ஏர்போர்ட் பட்டம்மாள் தெரு, பாரதி நகர் உள்ளிட்ட 9 இடங்க ளில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சம்பத், பகுதிக் குழுச் செயலாளர் கார்த்தி கேயன், பகுதிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர்
திருவாரூரில் உள்ள மாவட்டக் குழு அலுவலகமான தோழர் பி.ராம மூர்த்தி நினைவகத்தில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமையேற்றார். மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் கொடியேற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் ஜி.பழனிவேல், நகரச் செயலா ளர் எம்.பாலசுப்ரமணியன், மூத்த உறுப்பினர் எஸ்.கிருஷ்ணன், சிஐடியு மாவட்ட தலைவர் இரா.மாலதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாமேதை காரல்மார்க்ஸ், அவரின் அறிவார்ந்த நண்பர் ஏங்கல்ஸ், புரட்சி தலைவர் லெனின், ஸ்டாலின் ஆகியோரின் உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. புதூர்
திருவாரூர் ஒன்றியம் புதூர் கிராமத்தில் கிளைச் செயலாளர் என்.கணேசன் தலைமையில் மூத்த தலைவர் எஸ்.ஏ.பக்கிரிசாமி முன்னி லையில் கொடியேற்ற விழா நடை பெற்றது. ஒன்றிய செயலாளர் என்.இடும்பையன் கொடியேற்றினார். மாவட்டம் முழுவதும் பல்வேறு கிளை களிலும் செங்கொடி ஏற்றப்பட்டது.
வலங்கைமான் ஒன்றியம்
வலங்கைமான் ஒன்றியத்தில் கொக்கலாடி, பண்டித சோழநல்லூர், வேடம்பூர், கண்டியூர், வலங்கை மான் நகரத்தில் என பல்வேறு இடங்களில் ஒன்றிய குழு உறுப்பி னர் தலைமையில் கிளை செயலா ளர் முன்னிலையில் கட்சிக் கொடி யேற்றி சிறப்பாக கொண்டாடப் பட்டது. கொக்கலடி கிராமத்தில் கட்சி யின் ஒன்றிய செயலாளர் என்.இராதா தலைமையில் மாவட்ட குழு உறுப்பி னர் கே.சுப்பிரமணியன் முன்னிலை யில் மாவட்ட செயற்குழு எம்.சேகர் செங்கொடியை ஏற்றி வைத்து சிறப்பு ரையாற்றினார். எஸ்.சாமிநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கலந்து கொண்டனர்.
கொரடாச்சேரி
கட்சியின் கொரடாச்சேரி ஒன்றிய அலுவலகத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு கட்சியின் ஒன்றிய செய லாளர் கே.சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.தம்புசாமி நூற்றாண்டு கொடி யை ஏற்றி வைத்தார். நகரச் செய லாளர் எஸ்.சிவசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் கிளை செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஒட்டி ஒன்றியம் முழு வதும் 17 இடங்களில் கொடியேற்றி கிளைக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் நீடாமங்கலம் அலுவல கத்தில் கு.முனியாண்டி தலைமை யில் பி.ரெத்தினம் முன்னிலையில் செங்கொடி ஏற்றப்பட்டது. நீடா மங்கலம் ஒன்றிய செயலாளர் சோம.ராஜமாணிக்கம் செங்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.நகர கிளை செயலாளர் பொன்செல்வம் தமிழரசி ஆகியோர் கலந்து கொண்ட னர். நகரம் முழுவதும் கொடியேற்றி கொண்டாடப்பட்டது.