tamilnadu

மாற்றுத்திறனாளிகள் சங்க கிளை அமைப்பு

தஞ்சாவூர், ஆக.29- தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை ஒன்றியம், சாலியமங்கலம் ஊராட்சியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக ளுக்கான சங்கத்தின் புதிய கிளை அமைப்புக்  கூட்டம் டி.சபாபதி தலைமையில் நடை பெற்றது. 32 பேர் கலந்து கொண்ட இக்கூட்ட த்தில், கிளைத் தலைவராக ஆறுமுகம், செய லாளராக சபாபதி, பொருளாளராக ரவி, துணைத் தலைவராக மலர்விழி, துணைச் செயலாள ராக உமாபதியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அமைப்பின் ஒன்றியச் செயலாளர் வி.ரவி, ஒன்றியத் தலைவர் எஸ்.ரவி, தரைக்கடை சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.மணிமாறன் ஆகியோர் பேசினர். பொன்னமராவதி பொன்னமராவதி தாலூகா வேந்தன்பட்டி யில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்று த்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்க அமைப்புக் கூட்டம் மாவ ட்டத் தலைவர் க.சரவணன் தலைமையில் நடைபெற்றது.

;