tamilnadu

img

பள்ளியில் புத்தகக் கண்காட்சி

கும்பகோணம், மார்ச் 17- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடை கிரஸன்ட் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி யில் 33 ஆம் ஆண்டு புத்தக கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை கிராம நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி துவங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மனித நேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினரும், பண்டார வாடை ஊராட்சி உறுப்பினருமான முஹம்மது மஃரூப் தலைமை உரை நிகழ்த்தினார்.  பள்ளியின் நிர்வாகிகள் ஜாபர் அலி, அப்துல் ஜப்பார், அப்துல் முஹம்மது, ஜபருல்லா, முகம்மது பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்காட்சியில் அரசியல், ஆன்மீகம், கல்வி போன்ற எண்ணிலடங்கா புத்தகங்கள் இடம் பெற்றன. இதில் ஏராளமான மாணவ  மற்றும் மாணவிகளும், பெற்றோர்க ளும், பொதுமக்களும் கண்காட்சியில் கலந்து கொண்டனர். நிறைவாக பள்ளி யின் முதல்வர் கோமதி நன்றி கூறினார்.